15-1-26 முதல் 12-2-26 வரை
உயர்நிலையில் இருந்தாலும் எளிமையான வாழ்க்கையே நிலையானது என்பதை உணர்ந்து செயல்படும் கும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசி குரு பகவானின் பார்வையில் இருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடந்த கால துரோகங்களை பற்றி நினைத்து கோபப்படுவதை தவிர்க்கவும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, தன்னால் முடியும் என்ற நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 2ல் சனி இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். 5ல் குரு இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். வழக்கு விஷயங்களை கவனமாக கையாளுங்கள். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 5, 6, 7.
பரிகாரம்: திருகொள்ளிக்காடு சனிபகவானை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


