15-1-26 முதல் 12-2-26 வரை
எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகிய புதனும், சுக்ரனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நிறைவு ஏற்படும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் தற்போது கை வந்து சேரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.3ல் சனி இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உருவாகும். வீடு வாகனத்தை சீர்படுத்த செலவினங்கள் அதிகரிக்கும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதால் குலதெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வாழ்வில் சிறுசிறு தடைகள் பிரச்னைகள் வந்து சரியாகும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவு உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை.உங்கள் திறமைக்கு சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து உங்களை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும்.
சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 3, 4, 5.
பரிகாரம்: ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


