15-6-26 முதல் 16-7-26 வரை
மற்றவர்களை எளிதாக நண்பர்களாக்கிக் கொள்ளும் மீனராசி அன்பர்களே, உங்கள் ராசியிலேயே சனி பகவான் ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு தேவை.பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. புதிதாக அறிமுகமாகும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வீண் மனக் குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். 2ல் சுக்ரன் இருப்பதால் பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். பொருளாதார நிலையில் உயர்வும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். 4ல் குரு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் தாய் உடல்நலனில் கவனம் தேவை.வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் உரிமையாளரால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தையால் அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தெய்வ அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் . கோபம் வெறுப்பு விரக்தி இவற்றை தவிர்க்கவும். தியானம் யோகா பயில்வது மன அமைதியை அதிகரிக்கும். எதிலும் பொறுமை, நிதானம், விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 24, 25, 26.
பரிகாரம்: வாணியம்பாடி அருகே வளையாம்பட்டுவில் உள்ள முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


