13-2-26 முதல் 14-3-26 வரை
தனது லட்சியத்தை அடைவதில் மிகுந்த பிடிவாத குணம் உடைய விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். சனி 5ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தையின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். சுக்ரன் 5ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். 8ல் குரு இருப்பதால் தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்த நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். இருப்பினும் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 26, 27, 28.
பரிகாரம்: கோடகநல்லூர் கைலாசநாதர், சிவகாமி அன்னையை செவ்வாய்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


