search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)

விடாமுயற்சியால் வெற்றிவாகை சூடும் சிம்மராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 8ல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. 26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் 12ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. வீடு வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டியது அவசியம். ஆலயங்களுக்கு திருப்பணி அல்லது அன்னதானம் செய்வதால் தேவையற்ற விரயங்களை குறைக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களை முழுமையாக நம்ப வேண்டாம். தொழிலில் பார்ட்னர்களிடம் கவனமாக செயல்படுங்கள். உங்கள் ஆளுமைக்கு சவால்கள் உண்டாகும்.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது.கலைத்துறையினருக்குதற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.எதிலும் பொறுமை தேவை.

பரிகாரம்: சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள சிங்கப்பெருமாளை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.