search-icon-img
featured-img

3, 12, 21, 30

Published :

(4.12.2025 முதல் 10.12.2025 வரை)

கோபம் வரும் போதும் நிதானத்தை கடைப்பிடிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் தேவையற்ற வீண்செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. அரசியல்துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்னைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி வழிபடுவது செல்வ சேர்க்கையை தரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.