21.8.2025 முதல் 27.8.2025 வரை
தனது தோரணையால் அனைவரையும் இழுக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகள் செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.