search-icon-img
featured-img

கடகம்

Published :

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

17-8-2025 முதல் 16-9-2025 வரை

குடும்பம்: செவ்வாய், சுக்கிரன் ஆகிய இருவர் மட்டும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! மற்ற ஏனைய கிரகங்களின் மூலம் அனுகூலம் எதையும் எதிர்பார்க்க இயலாது. ராசிக்கு எட்டாம் இடத்தில், கூட்டு சேர்ந்துள்ள சனி - ராகு சேர்க்கை உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றாலும், மிதுன ராசியில் அமர்ந்துள்ள குரு பகவானின் பார்வை பெறுவதால், சனி - ராகு தோஷம் பெருமளவில் விலகிவிடுகிறது. வருமானம் திருப்திகரமாக இருப்பினும், எதிர்பாராத செலவுகளினால் பணம் விரயமாகும். மாதத்தின் கடைசி வாரத்தில் பணப் பற்றாக்குறை கடுமையாகவே இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவும், வாக்குவாதமும் மன நிம்மதியைப் பாதிக்கும். களத்திர ஸ்தானத்தில் சனி - ராகு இணைந்திருப்பதால், திருமண முயற்சிகளில் தடங்கல்களும், தாமதங்களும் ஏற்படும். பல தருணங்களில், தவறான வரனை நிச்சயித்துவிட நேரிடும். தீர விசாரித்து, அதன் பின்பே வரனை நிர்ணயிப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

உத்தியோகம்: அஷ்டம ஸ்தானத்தில், உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பது நன்மை தராது. பணிச் சுமை சக்திக்கு மீறி இருக்கும். எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலுங் கூட, மேலதிகாரிகளை திருப்தி செய்ய இயலாது. உங்கள் கடமைகளில் ஏதாவதொரு குற்றங்குறைகூறிக்கொண்டேயிருப்பார்கள். “வேலையை விட்டுவிடலாமா...!” என்ற எண்ணம் மனத்தைஅரித்துக்கொண்டேயிருக்கும். உணர்ச்சிவசப்பட்டு, அவசர முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளும், சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. அவர் வக்கிர கதியில் உள்ளபோது, ராகுவும் அவருடன் சேர்ந்திருப்பது, சந்தையில் நீங்கள் கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க நேரிடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. உங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது கடினம். மேலும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் குறைவது, உங்கள் பிரச்னைகளை மேலும் அதிகமாக்கும்். அளவோடு முதலீடு செய்து, திட்டமிட்டு, உங்கள் சரக்குகளை விற்பது, நஷ்டம் ஏற்படாமலிருக்க உதவும். கிரக நிலைகளின்படி, வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் இம்மாதம் குறையக்கூடும். இதனை ஏன் வற்புறுத்துகிறோம் என்றால், உங்கள் நிதி நிலைமையை, திட்டமிட்டுசரிசெய்துகொள்ளாவில், பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பதேயாகும்.

கலைத்துறையினர்: கலைத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகமான சுக்கிரன் மட்டுமே உங்களுக்கு ஓரளவு அனுகூலமாக சஞ்சரிக்கிறார். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை! ஓரளவு வாய்ப்புகள் கிடைக்கும். அதனால், வருமானமும் ஒரே சீராக இருக்கும். நிச்சயமாகக் கிடைக்கும் என்றிருந்த பல நல்ல வாய்ப்புகள், கைநழுவிப் போகும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூட, எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் இராது. திரைப்படத் துறையினர், சற்று கடுமையான நிதி நிலைமையைச் சந்திக்க நேரிடும். பண விஷயங்களில், அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மாதமாகும் இது!

அரசியல் துறையினர்: சுக்கிரன் ஒருவர் மட்டுமே ஓரளவு சாதகமாக வலம் வருகிறார். கட்சியில் உங்களுக்கென்றே ஓர் தனிக் கூட்டம் உள்ளது கிரக நிலைகளின்படி! அதில்தான் தற்போது உங்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதை கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. முதன்முறையாக, உங்களுக்கு எதிராக மறைமுகப் பேச்சுகள் உருவாகியுள்ளதை சனி - ராகுவின் சஞ்சார நிலை குறிப்பிட்டுக்காட்டுகிறது. நீங்கள் சுயநலத்துடன் செயல்படுவதாக பலர் நினைப்பதை, சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. முதல் முறையாக, எதிரிகள் உருவாகிவருகிறார்கள். உங்கள் மீது அதிருப்தியும் வளர்ந்து வருகிறது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தருணமிது.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவே அனுகூலமாக வலம் வருகின்றனர். பாடங்களில் மனதை முழுமையாகச் செலுத்துவது சிரமமாக இருக்கும். கூடியவரையில், நண்பர்களுடன் வெளியே செல்வது, பொழுதுபோக்குவது ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். இல்லாவிடில், உங்கள் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படக்கூடும்.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளுக்கு அவசியமான தண்ணீர், உரம், விதைகள் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. ஆயினும், உழைப்பு சற்று கடினமாக இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்கள் தொல்லை தரும்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்புகளை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, மனக் கவலை அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பு சம்பந்தமான பிரச்னைகள் நிம்மதியைப் பாதிக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் உண்டாகும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, பணிச் சுமையும், அலுவலகச் சூழ்நிலையும் கவலையளிக்கும்.

அறிவுரை: உடல் உழைப்பையும், குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய கற்பனையான கவலைகளையும், பயத்தையும் விட்டுவிடுங்கள்.

பரிகாரம்: திங்கள்கிழமைதோறும், அம்பிகை அல்லது மகாலட்சுமி சந்நதியில் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து தரசித்துவிட்டு வரவும். ஒவ்வொரு துளி நெய்க்கும் அளவற்ற பரிகார சக்தியுள்ளது.

2. கோயிலைச் சுற்றி வெளிப் பிராகாரத்தில் அரிசிமாவுடன் சர்க்கரைப் பொடியையும் கலந்து, கோயில் மதிள் சுவரைச் சுற்றிலும் தூவிவிடவேண்டும். மகத்தான பரிகாரப் பலன்களை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கும்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 1, 2, 6-8, 11-13, 17-20, 24-26, 31.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி : 21 முற்பகல் முதல், 23 மாலை வரை.