(17-11-2025 முதல் 15-12-2025 வரை)
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: ஏழரைச் சனிக் காலம் உங்களுக்கு முடிவடைந்து கொண்டிருக்கிறது, படிப்படியாக! சனி பகவானின் பாதிப்பால், மகர ராசியினர் பட்ட சிரமங்களுக்காக சனி பகவான் இக் கடைசி பகுதியில், சில நன்மைகளை அளித்தருள்வதாக மிகப் புராதன ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. பணப் பற்றாக்குறை படிப்படியாக விலகி விடும். மன அமைதியைப் பாதித்து வந்த பல பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெற வழி பிறக்கும், நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பலருக்கு, புத்திர பாக்கியம் கிட்டும். திருமண வயதில் பெண் இருப்பின், மனத்திற்குத் திருப்தியளிக்கும் நல்ல வரன் அமையும். சப்தம ஸ்தானத்தில், குரு அமர்ந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். நிதி நிலைமையைச் சரிசெய்துகொள்ள வாய்ப்புகள் கிட்டும்.
உத்தியோகம்: ஏழரைச் சனிக் காலம் உங்களை விட்டுச் சிறிது, சிறிதாக விலகிவருகிறது! அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பல பிரச்னைகளின் கடுமை வெகுவாகக் குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து உங்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதால், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மகர ராசி அன்பர்களுக்கு நல்ல செய்தி காத்துள்ளது. பணி காரணமாக, குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றுசேர்வார்கள்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, தொடர்ந்து மனக் கவலை அளித்து வந்த போட்டிகளின் கடுமை குறைய ஆரம்பிக்கும். சந்தை நிலவரம் படிப்படியாக உங்களுக்குச் சாதகமாக மாறிவருவதை அனுபவத்தில் காணலாம். புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு செய்யலாம்.
கலைத் துறையினர்:புதிய வாய்ப்புகள் கிட்டாமல், தொடர்ந்து ஏமாற்றத்தையே அனுபவித்துவந்த உங்களுக்கு, மீண்டும் உற்சாகத்தையளிக்கும் வகையில், புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். வருமானம் உயரும். சங்கீத சபாக்களின் மூலம் வருமானம் உயரும். மக்களிடையே குறைந்துவந்த செல்வாக்கு, மீண்டும் துளிர்விடும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று அங்கு நிகழும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பும் வாய்ப்புகளும், அவற்றின் காரணமாக, வருமானமும் உயரும். மீண்டும் மக்களிடையே செல்வாக்கு உயரும். இதனால் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த அனைத்து கிரகங்களும், உங்களுக்கு ஆதரவாக சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், மக்களிடையே செல்வாக்கு உயரும், கட்சித் தொண்டர்களிடையே புது உற்சாகமும், ஆர்வமும், மகிழ்ச்சியை அளிக்கும். சூரியனின் நிலையினால், செல்வாக்கும், நெருங்கிய தொடர்பும் கொண்டுள்ள பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் நட்பும் ஆதரவும் உங்கள் அரசியல் அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுபத்துவப் பாதையில் வலம் வருவதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். படித்து, கிரகித்தவற்றை தேர்வுகளில் சரியாக விடை எழுதும் ஆற்றலைக் கிரகங்கள் குறைவில்லாமல் அளித்தருள்வதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், அதற்கான நிதியுதவிகள், எளிதில் கிட்டும். பிரசித்திப் பெற்ற கல்லூரிகளில், இடம் கிடைக்கும். பலருக்குக் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: செவ்வாய் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளதால், விவசாயத்திற்கு அத்தியாவசியமான தண்ணீர் வசதி, உரங்கள், விதைகள், கால்நடைகள், நவீன விவசாய உபகரணச் சாதனங்கள் எளிதில் கிட்டும். அண்டை நிலத்தாரோடு சுமுகமான நல்லுறவும், சூழ்நிலையும் நிலவும், கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை முழுமையாக அடைத்து, உங்கள் நிதி நிலைமையைச் சரி செய்துகொள்ள ஏற்ற தருணம் இந்தக் கார்த்திகை மாதம்! இப் பொன்னான தருணத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்!!
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைக் குறிப்பிடும் கிரகங்களில் மிக முக்கியமானது சுக்கிரன்! அவர், இம்மாதம் முழுவதும் சிறந்த சுப பலம் பெற்று, அனுகூலமாக வலம் வருவதால், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் சற்று தாராளமாகவே அள்ளி வழங்கக்கூடிய மாதம் ஆகும் இது! இதனை அனுபவத்தில் காண முடியும். விவாகத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, மனம்போல் மாங்கல்யம் அமையும். ஏற்கனவே திருமணமாகியுள்ள பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் யோகம் உள்ளதையும், கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வேலைக்கு முயற்சித்துவரும் நங்கையருக்கு, மனத்திற்குப் பிடித்தமான நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தற்காலிகப் பணிகளில் உள்ள மங்கையருக்கு, வேலை நிரந்தரமாகும். வேலைக்குச் சென்றுவரும் வனிதையருக்கு, சிறுபதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.
அறிவுரை: பெரும்பான்மையான கிரகங்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக வலம் வருகின்றனர், இம்மாதம் முழுவதும்! ஆதலால், பல நன்மைகளை இந்த ராசியினர் அடைவது திண்ணம்.
பரிகாரம்: சனி மற்றும் ராகுவிற்கு மட்டும் பரிகாரம் செய்வது அவசியம். சனிக்கிழமைகளில் ஏழை ஒருவருக்கு, உணவளிப்பதும், பசுக்களுக்கு பசும் புல் அளிப்பதும், காகங்களுக்கு நெய், பருப்பு, எள் கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வருவதும் கைமேல் பலனிக்கும் மகத்தான, சக்திவாய்ந்த பரிகாரங்களாகும்.
2 உங்கள் வீட்டிற்கருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலை நேரத்தில், தீபமேற்றி வந்தால் போதும்.
கீடா பதங்கா மசகாச்ச வருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா ருஷ்ட்வாதிருக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இந்தப் பரிகாரத்தை உங்கள் வீட்டுப் பூஜையறையில், மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி குரு பகவானை வாயினால் பாடி, மனத்தளவில் சிந்தித்தாலே போதும் மகத்தான புண்ணிய பலன்கள் உங்களை வந்தடையப்போவது திண்ணம். நமக்குத் தேவை, நம்பிக்கையுடன்கூடிய பக்தி மட்டுமே!
அனுகூல தினங்கள்:
கார்த்திகை : 1-3, 8-11, 15-17, 21- 3, 27, 28.
சந்திராஷ்டம தினங்கள்:
கார்த்திகை : 24-ந் தேதி காலை முதல், 26-ந் தேதி பிற்பகல் வரை.


