இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மிதுனம்

Published: 16 Sep 2025

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

 17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: ஜென்ம ராசியில், குரு பகவான் அமர்ந்திருப்பது, குடும்பப் பிரச்னைகளைக் குறிக்கிறது! "ஜென்ம குரு, வனத்திலே..." என்றொரு மூதுரையும் உண்டு!! ராம பிரான், வனவாசம் சென்றபோது, அவரது ஜனன கால ஜாதகப்படி, குரு பகவான், அவரது ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால், இத்தகைய பழமொழி உருவாகியது. ராமபிரான் பட்ட துன்பங்களைக் கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம், துளசிதாசரின் மானஸ சரித் மானஸ் ஆகிய நூல்கள் விவரிக்கின்றன. வரவிற்கு மீறிய செலவுகள், கணவர் - மனைவியரிடையே கருத்து வேற்றுமை, நெருங்கிய உறவினர்களால் பிரச்னைகள், திருமண முயற்சிகளில் தடங்கல்கள் போன்ற பிரச்னைகள் கவலையை அளிக்கும். நண்பர்களும், பகைவர்களாக மாறுவர்! சொல்லிலும், செயலிலும் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணமிது!

உத்தியோகம்: அன்றாடப் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலதிகாரிகளுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்வது, பிரச்னைகள் உருவாவதைத் தவிர்க்க உதவும். வெளிநாடுகளில், வேலைக்கு முயற்சிக்கும் அன்பர்கள், இடைத்தரகர்களை நம்பி ஏமாந்துவிடாமலிருக்க வேண்டும். புதிதாக வேலைக்கு முயற்சிசெய்துவரும் மிதுன ராசியினருக்கு, பொறுமை, நிதானம் அவசியம்.

தொழில், வியாபாரம்: சந்தையில், நியாயமற்ற போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுக்கும். கருத்து வேற்றுமையினால், பங்குதாரர்கள் சிலர், விலக நேரிடும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில், தடங்கல்களும், தாமதமும் ஏற்படுவதால், பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். சந்தை நிலவரத்தை முன்கூட்டியே விசாரித்து அறிந்து, அதற்கேற்றபடி, உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது, நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவும்.

கலைத் துறையினர்: கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக அமைந்துள்ளன, இம்மாதத்தில்! வாய்ப்புகள் குறையும். வருமானமும், பாதிக்கப்படும். பழைய கடன்கள் மன அமைதியைப் பாதிக்கும். மக்களிடையேயும், ஆதரவு குறையும். பலருக்கு, புதிய கடன்களை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திரைப்படத் தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து, புதிய தயாரிப்புகளில் ஈடுபடலாம். நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கு, வருமானம் குறைவதால், வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! கட்சியில், செல்வாக்கு சரியும். மேல்மட்டத் தலைவர்கள், உங்களைச் சந்தேகிப்பார்கள்! நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய மாதம் இது என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. பிற அரசியல் கட்சிகளில் உங்களை இழுப்பதற்கு முயற்சிகளைச் செய்வார்கள். மனவுறுதி அவசியம் தேவை!

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள புதன், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர்கல்வி பயில வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் ஈடுபடலாம்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் பெற்றுள்ள அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். ஆயினும், வயல் பணிகளில் கடினமாக உழைக்க வேண்டி வரும். விவசாயப் பயிர் தொழிலுக்கு அவசியமான, தண்ணீர், உரம், விதைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைவின்றிக் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள் இரண்டு! ஒன்று, குரு பகவான்!! மற்றொன்று சுக்கிரன்!!! இவர்களில், சுக்கிரன் மட்டும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். ஆயினும், குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், அங்கு சஞ்சரிக்கும் சனி மற்றும் ராகுவின் தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறார். பெண்மணிகளின் உடல் ஆரோக்கியத்தில், நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில், வெற்றி கிட்டும். வேலையில்லாத பெண்மணிகளுக்கு, நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகியுள்ள பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. கருவுற்றுள்ள கன்னியருக்கு, சுகப் பிரசவம் நிச்சயம்!!

அறிவுரை: பாக்கிய ஸ்தானத்தில், சனி - ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வீண் செலவுகள் அதிகரிக்கும். கைப்பணம் கரையும். கூடியவரையில், சிக்கனமாக செலவு செய்யுங்கள். புதிய கடன்கள் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தற்போதுள்ள கிரக நிலைகளின்போது, வாங்கும் கடன் எளிதில் அமைபடாது என, "பூர்வ பாராசர்யம்" எனும் பிரசித்திப் ெபற்ற ஜோதிட நூல் கூறுகிறது.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் மட்டும் உபவாசமிருப்பது, கைமேல் பலனளிக்கும். இயலாதவர்கள், வியாழக் கிழமையன்று, ஓர் ஏழை அல்லது பசுவிற்கு உணவளித்தாலும் தோஷத்தைப் போக்கும்.

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 1, 2, 6-8, 12-14, 18, 19, 23-25, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 15 பிற்பகல் முதல், 17 இரவு வரை.

பிறந்தநாள் பலன்கள்