இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

சிம்மம்

Published: 16 Sep 2025

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை! வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். பற்றாக் குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை!! களத்திர ஸ்தானத்தில், வக்கிர சனி பகவானுடன், ராகு சேர்ந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குடும்பச் சூழ்நிலையில், அமைதி நிலவும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், நல்ல வரன் அமைவது, மகிழ்ச்சியை அளிக்கும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளையின் வரவு, குடும்பத்தில், மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பழைய கடன்கள் இருப்பின், அவை அடைபடும். திருமணமாகியுள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கு உகந்த மாதம் இந்தப் புரட்டாசி!

உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து, ஜீவன காரகரான சனி பகவானையும் ராகுவையும் தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துவதால், பலருக்கு ஊதிய உயர்வு, பதவியுயர்வு ஆகியவை கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும், சிம்ம ராசி அன்பர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். எளிதில் வெற்றி கிட்டும். தற்காலிகப் பணிகளில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரமாகும்.

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்கு, ஏற்றபடி அமைந்துள்ளன இம்மாத கிரக நிலைகள்! சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஆதரவு கிட்டும். புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்ற மாதம் இப்புரட்டாசி. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பும், வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும். சந்தை நிலவரம் இம்மாதம் முழுவதும், உங்களுக்குச் சாதகமாக உள்ளதால், லாபமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும்.

கலைத் துறையினர்: கலைத் துறையுடன் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்று, சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் கிடைக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய தயாரிப்புகளில் துணிந்து முதலீடு செய்யலாம். லாபம் கிடைக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்ட சுக்கிரனும், மற்ற கிரகங்களும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், சிறந்த முன்னேற்றம் உங்களுக்குக் காத்துள்ளது. உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு, மகிழ்ச்சியை அளிக்கும். கட்சியில் புதிய பொறுப்பொன்று ஏற்கும் வாய்ப்பும், கிரக நிலைகளின்படி அமைந்துள்ளது. மற்ற அரசியல் கட்சியினர்கூட, உங்களுக்கு மரியாதை காட்டுவார்கள். இதற்குக் காரணம், உங்கள் அரசியல் வாழ்க்கையில் ஒரு முறைகூட, பிற கட்சியினரைத் தரக்குறைவாகப் பேசியதில்லை!

மாணவ - மாணவியர்: புரட்டாசி 12-ம் தேதி வரை கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாக அமைந்துள்ளன! படிப்பில் மனம் தீவிரமாக ஈடுபடும். வெளிநாடு சென்று, அங்குள்ள கலாசாலையில் விசேஷ உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், கிரக நிலைகள் ஓரளவு சாதகமாக இருப்பதால், முயற்சிக்கலாம். புரட்டாசி 13-ம் தேதி வித்யாகாரக கிரகம், ராசி மாறுவதால், பாடங்களில் கவனம் குறையக்கூடும். தேவையற்ற விஷயங்களில் மனம் ஈடுபடும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை, தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள செவ்வாய், சுப-பலம் பெற்று வலம் வருகிறார், இம்மாதம் முழுவதும்! தண்ணீர்ப் பற்றாக்குறை, சிறிதளவும் இராது. கால்நடைகள் அபிவிருத்தியடையும். விளைச்சலும், வருமானமும் உழைப்பிற்கேற்றவாறு கிட்டும். முயன்றால், பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறலாம்.

பெண்மணிகள்: கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதத்தில்! ஆதலால், நன்மைகளே அதிகமாக இருக்கும். உங்கள் மன விருப்பங்கள் நிறைவேறும். களத்திர ஸ்தானத்தில், வக்கிர கதியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ராகுவுடன் இணைந்திருப்பதால், கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை குறையும். பொறுமை, நிதானம், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்தத் தோஷம் இம்மாதம் முடியும் வரையில்தான் இருக்கும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. தினமும், ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் படித்து வருதல் துணை நிற்கும்.

அறிவுரை: பிறருடன் பழகும் போது, உணர்ச்சிவசப் படுவதைத் தவிர்த்தால் போதும்.

பரிகாரம்: சனிக் கிழமைதோறும், எள், பருப்பு, நெய் கலந்த ஐந்து சாத உருண்டைகள் காகத்திற்கு வைத்து வந்தால் போதும். இது மிகச் சிறந்த, சூட்சுமங்கள் நிறைந்த பரிகாரம் இது!

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 1, 5-8, 12-15, 22-24, 28-30.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 19 பின்னிரவு முதல், 21 பின்னிரவு வரை.

பிறந்தநாள் பலன்கள்