பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கடகத்தில் குரு பகவான் உச்ச கதியில் சஞ்சரிப்பதால், தீர்த்த - தல யாத்திரை சித்திக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், காவேரி, கங்கை, சரயூ போன்ற புண்ணிய நதிகள் ஸ்நான பாக்கியம் கிட்டும். சுக்கிரன் சுப பலத்துடன் வலம் வருவதால், கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் ஓங்கும். அஷ்டம ராசியான, துலாம் ராசியில், சூரியன் - செவ்வாய் இணைந்திருப்பதால், உஷ்ண சம்பந்தமான பிணிகளும், சரும உபாதைகளும் ஏற்படக்கூடும். எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்பட்டு, அதன் பின்பு வரன் அமையும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படக்கூடும்.
உத்தியோகம்: அலுவலகப் பணிகளில், பணிச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும், பாராட்டுதல்களும் மனத்திற்கு ஆறுதலைத் தரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி. சிலருக்கு, பதவியுயர்வுடன் இடமாற்றமும் ஏற்படக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: போட்டிகளும், பொறாமையும், அலைச்சலும் சக்திக்கு மீறியதாக இருக்கும். ஆயினும், அதற்கேற்ற லாபமும் கிட்டும். சந்தை நிலவரம் சாதகமாக உள்ளது. நிதி நிறுவனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் கிட்டும். வெளிநாட்டிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். கூடுதலாக, விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்த ஐப்பசி!
கலைத் துறையினர்: சுக்கிரனும், வக்கிர சனியும், ராகுவும் கலைத் துறை முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை! குரு பகவானுக்கும் அதில் பங்குண்டு!! ஆதலால், கலைத் துறை அன்பர்களுக்கு மிகவும் அனுகூலமான மாதமாகும் இந்த ஐப்பசி! புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்தையும், மக்களிடையே செல்வாக்கையும் உயர்த்தும். தசா, புக்திகள் ஆதரவாக இருப்பின், வெளிநாடு சென்று, லாபகரமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிட்டும். உங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏற்ற மாதம் இந்த ஐப்பசியே!!
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு நேரிடையான ஆதிக்கம் கொண்டுள்ள சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய வீரியம் நிறைந்த கிரகங்கள் சாதகமான, தெய்வீக பாதைகளில் வலம் வருவதால், கட்சித் தொண்டர்களிடையே ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கு உயரும். அரசியல் பிரமுகர் ஒருவருடைய தொடர்பும், அதன் காரணமாக, பல நன்மைகளும் ஏற்படவுள்ளன, இந்த ஐப்பசி மாதத்தில்!
மாணவ - மாணவியர்: கல்வித் துறையுடன் இணைந்துள்ள அனைத்து கிரகங்களும், சுபத்துவ பலத்துடன் வலம் வருவதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் உயரும். உயர் கல்விக்கு பண உதவி கிடைக்கும். மேல் படிப்பிற்கு,
விவசாயத் துறையினர்: ராசிக்கு, அஷ்டம (8-ம் இடம்) ஸ்தானமாகிய, துலாம் ராசியில், சூரியன், செவ்வாய் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு கிரகங்்களுமே அக்னி (நெருப்பு) கோள்களாகும். கடும் வெயிலில், வேலை செய்வதைக் குறைத்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும். அதேபோன்று இரவு நேரங்களில் வயல் பணிகளைத் தவிர்ப்பதும் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், கால் நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். பல தருணங்களில் புதிய கடன்களை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.
பெண்மணிகள்: உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை, இம்மாத கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. சரும உபாதைகள், மாதவிடாய் சம்பந்தமான பிரச்னைகள், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடும். முடிந்த வரையில், கடின உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரின் உதவியை நாடிப் பெறுவது நல்லது. குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகள் உறவினர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பசுவிற்கோ அல்லது ஏழை ஒருவருக்கோ உணவளித்தால் போதும். மிகச் சிறந்த பரிகார பலன் கிட்டும்.
அனுகூல தினங்கள்
ஐப்பசி : 1-3, 7-9, 13-15, 20-22, 27-29.
சந்திராஷ்டம தினங்கள்
ஐப்பசி : 4 காலை முதல், 6 இரவு வரை.