(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
17-8-2025 முதல் 16-9-2025 வரை
குடும்பம்: தன ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் இணைந்திருப்பதால், இம்மாதம் முழுவதும் பண வசதி போதுமான அளவிற்கு இருக்கும். குடும்பச் சூழ்நிலை, திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப-நிகழ்ச்சிகளும், அவற்றின் காரணமாக, சுபச் செலவுகளும் ஏற்படும். சமாளிப்பதில் சிரமம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. திருமண முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும். நல்ல வேலைக்காக முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும். புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் வலம் வருவதால், குழந்தைகளுக்கு உஷ்ண சம்பந்தமான உபாதை கள் ஏற்படக்கூடும். வெளிநாட்டில் பணியாற்றி வரும் உறவினர் அல்லது நண்பர் ஒருவரது வருகை, உற்சாகத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் சனி பகவானும், ராகுவும் சேர்ந்திருப்பதால், பணிச் சுமை அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு, இடமாற்றம் அல்லது பொறுப்புகள் மாற்றம் ஏற்படக்கூடும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் ரிஷப ராசி அன்பர்களுக்கு, மனத்திற்கு திருப்தியளிக்காத வேலை கிடைக்கும். ஒப்புக்கொள்வது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தில் வக்கிர சனி பகவானும், ராகுவும் சேர்ந்திருப்பதால், சந்தையில் கடினமான போட்டிகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் சரக்குகளுக்கு, தேவை குறையும். நிதி நிறுவனங்களினால், அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும். சகக் கூட்டாளிகளின் ஒத் துழைப்பு குறையும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் தாமதப்படும். விஸ் தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுவது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறையைத் தன் அதிகாரத்தில் கொண்டுள்ள சுக்கிரன், இம்்மாதம் முழுவதும் சுப-பலம் பெற்று சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே பிரபலமாகிவிடுவீர்கள். பத்திரிகைகளின் ஆதரவு, எளிதில் கிட்டும். திரைத் துறை அன்பர்களுக்கு, கிரக நிலைகள் அனுகூலமாகத் திகழ்கின்றன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், தயக்கமின்றி புதுத் தயாரிப்புகளில் முதலீடு செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் நடிக்கும் படங்கள் மகத்தான வெற்றி பெறும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. பரதநாட்டியக் கலைஞர்கள், கர்நாடக சங்கீத வித்வான்கள், கதா-காலட்க்ஷேப உபன்யாசகர்கள், ஓது வாமூர்த்திகள், நாதசுவரக் கலைஞர்கள் ஆகியோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறை அன்பர்களுக்கு, அனுகூலமான மாதமிது! மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு எளிதில் கிட்டும். செல்வாக்கு மிகுந்த தலைவர் ஒருவரின் தொடர்பு உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளது. இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள் ளுங்கள். கட்சித் தொண்டர் களிடையே ஆதரவு பெருகும். மறைமுக வருமானம் குறைவின்றி நீடிக்கும். அலைச்சல்கள் இருப்பினும், ஆதாயமும் கிட்டும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், படிப்பில் ஆர்வமும், உற்சாகமும் மேலிடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உங்கள் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும். வெளிநாடு சென்று, பிரத்யேக உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிரச்னை எதுவுமில்லாமல் எளிதில் விசா கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாயும், விவசாயத் துறைக்கு அதிகாரம் படைத்த மற்ற கிரகங்களும், அனுகூலமாக சஞ்சரிப்பதால், தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. பயிர்கள் செழித்து வளரும். உங்கள் விளை பொருட்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
பெண்மணிகள்: குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகின்றன. எண்ணங்களும், ஆசைகளும் நிறை வேறும். குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் மாதம் இது! குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனத்திற்கு இதமாய் அமையும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்து வரும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில் மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும். பணி காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பிரிந்திருக்கும் கணவர் - மனைவியர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
அறிவுரை: ஜீவன ஸ்தானத்தில் வக்கிர கதியில் உள்ள சனி பகவானும், ராகுவும் இணைந்திருப்பதால் வேலைபார்க்கும் ரிஷப ராசி அன்பர்கள், தங்களின் அன்றாடப் பொறுப்புகளிலும், கடமைகளிலும் கவனமாக இருத்தல் அவசியம். தவறுகள் ஏற்படக்கூடும்.
பரிகாரம்: ராகு மற்றும் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது அவசியம். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபத்தில் சிறிதளவு எள் எண்ணெய் சேர்த்துவருவது மிகச் சிறந்த பரிகாரமாகும். திருக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே, கூடுதலாக பரிகார தீபம் ஒன்று ஏற்றிவருவது, கைமேல் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 5-8, 12-15, 19-21, 26-28, 31.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 16 இரவு முதல், 18 வரை.