(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்துறையினருக்கு பதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும்.