(7.8.2025 முதல் 13.8.2025 வரை)
சாதகங்கள்: ராசியின் ராசிநாதன் சனி வக்கிரம் பெற்று சஞ்சரிக்கிறார் ஆனாலும் அவரால் நிச்சயமாக தொல்லை இருக்காது காரணம் அவர் ராசியில் ஆட்சி பெற்று இருக்கிறார். எந்தக் கிரகமாக இருந்தாலும் சொந்த ராசியில் ஆட்சி பெறுவது அந்த ராசியைப் பலப் படுத்தும். அது தவிர பஞ்ச மஸ்தானத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து ராசியைப் பார்வையிடுவது மிகச் சிறப்பான பலனைத் தரும். சூரியன் புதனோடு ஆறில் சஞ்சரிப்பதால் அரசாங்க உதவிகளும் அனுகூலங்களும் உண்டு. கலைத்துறை சிறப்பாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. குடும்பப் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். சனி ராகு தோஷம் சற்று குறையும்.
கவனம் தேவை: அஷ்டமச் செவ்வாய், சப்தமகேது என பல கிரகங்கள் சற்று தொல்லை தரும் அமைப்பில்தான் இருக்கின்றன. சகோதர உறவுகளில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், டென்ஷன் முதலியவை ஏற்படும். தலைவலி முதலிய உடல் உபாதைகள் நேரலாம். சிறு விபத்துகளுக்கு வாய்ப்புண்டு என்பதால் கவனத்தோடு இருக்கவும். எதிலும் கவனமும் பொறுமையும் இந்த நேரத்தில் தேவை.
பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். சனிக்கிழமை தோறும் நவகிரக சந்நதிக்குச் சென்று பிரார்த்தனை செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.