(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: பல துன்பங்களுக்கு இடையே சில ஆறுதல்கள் தரும் அமைப்புக்கள் உண்டு. ஏழில் சூரியன் புதன் இணைந்து ராசியைப் பார்க்கின்றார்கள். ஒரு விதத்தில் அது சிரமங்களைக் கொடுக்கும் என்றாலும்கூட, சில நல்ல அரசியல் மாற்றங்களையும் உத்தியோக மாற்றங்களையும் தரும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு துன்பங்கள் குறையும். சுக்கிரன் ஆறில் இருந்தாலும், பொருளாதாரத்தில் கை வைக்க மாட்டார். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். அதோடு குரு உங்கள் ராசியைப் பார்வையிடுவதாலும், லாபஸ்தானத்தைப் பார்வையிடுவதாலும், பாக்கியஸ்தானத்தை பார்வையிடுவதாலும், எத்தனைச் சிக்கல்கள் வந்தாலும் அதிலிருந்து வெளியேறும் வழிகளும் புலப்படும். பெரியோர்களின் ஆசிகளும் தெய்வத்தின் ஆசியும் துணையாக நின்று சிக்கல்களில் இருந்து விடுவிக்கும்.
கவனம்தேவை: கிரகங்களின் அனுசரணை அற்ற நிலையை கருத்தில் கொண்டு யோசித்து கவனமாகச் செய்ய வேண்டும். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால், வாகனங்களில் செல்லும்போது சிறு விபத்துக்கள் நேரலாம். அல்லது வாகனங்கள் பழுது படலாம். இவற்றில் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும். சனி ராகு ராசியிலேயே இருப்பதாலும், பாவ கிரகங்களான சூரியனின் பார்வை விழுவதாலும், இல்லறச்சிக்கல்கள் எழத்தான் செய்யும். அவைகளை பொறுமையோடு விடுவித்து வாழ்வது ஒன்றே வழி.
பரிகாரம்: வயதானவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். துர்க்கையை வணங்குங்கள்.