(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் அஷ்டம ராசியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த ராசியில் ஆட்சி பலத்தோடு இருப்பது சிறப்பு. அதோடு இந்த வாரத்தில் சுக்கிரனுடைய பார்வையில் ராசி இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வழி இல்லை. சனிராகு லாபஸ்தானத்தில் இருப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும் குடும்பச் செலவுகள் அளவாக இருக்கும். ஐந்தாம் இடத்தில் உள்ள கேது தெய்வ திருத்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பினை வழங்குவார். ராசியை சுக்கிரன் பார்ப்பதால் சுப காரிய முயற்சிகள் தடைப்படாது.
கவனம் தேவை: தொழிலாளர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்குடும்ப உறுப்பினர்களிடம் நயமாக நடந்து கொள்வது சிறப்பு. எட்டில் செவ்வாய் சூரியனும் இருக்க சனியின் பார்வையும் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டமம்: 20.11.2025 காலை 4.14 முதல் 22.11.2025 பிற்பகல் 4.47 வரைசந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமை பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றுங்கள். முருகப்பெருமானை மனதார தியானியுங்கள்.


