(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை அஷ்டமத்தில் இருந்த சூரியன் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானத்திற்கு நகர்ந்து தனது நண்பரான செவ்வாயுடன் சேருகிறார். ராசிநாதன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும், சூரியனோடு இணைந்து இருப்பதும், இருவரும் தைரிய வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதும் சிறப்பான பலன்களைத் தரும். சனி ராகு நன்றாக இருப்பதால் பொருளாதாரம் வேகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் உண்டு. சனி வக்கிர நிவர்த்தி ஆனதால் வியாபாரம் செழிப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: நான்காம் இடத்தில் குரு வக்ரம் பெற்றிருப்பதால், மனதில் தளர்ச்சி ஏற்படும். நினைத்த காரியம் தடைபடும். காரணம் புரியாது. அஷ்டமத்தில் புதன் அமர்ந்திருப்பது ஒரு விதத்தில் நன்மை என்றாலும்கூட மனதில் இனம் புரியாத கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். நரம்புத் தளர்ச்சி முதலிய நோய்கள் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 17.12.2025 காலை 10.26 முதல் 19.12.2025 இரவு 10.51 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வராகப் பெருமாளை வணங்குங்கள். வாழ்க்கை வளம் பெறும்.


