(11.9.2025 முதல் 17.9.2025 வரை)
சாதகங்கள்: பல கிரக நிலைகள் இவ்வாரத்தில் மாற்றம் அடைவதால் நன்மைகள் உண்டு. சுக்கிரன் நான்காம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நிலையில் இருக்கிறார். பணத் தேவைகள் பூர்த்தியாகும். செவ்வாய் ஏழாம் இடத்தில் இருப்பதால் 14ம் தேதி, மாற இருப்பதால் சுறுசுறுப்பைத் தருவார். எதிரிகளை வெல்ல வைப்பார். அதோடு அவர் ராசியைப் பார்ப்பது மிகச் சிறப்பான பலனைத் தரும். சுபகாரியங்கள் பூர்த்தியாகும். பூமி லாபம் கிடைக்கும். கட்டிய வீடு பழுது பார்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுகமாக இருக்கும். தொழில் வளம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. எடுத்த காரியத்தை முடிக்க முடியும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஏற்றம் உண்டு. தசாபுத்திகள் அனுகூலமானால் பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்கவும் வழி உண்டு.
கவனம் தேவை: மூன்றில் குரு இருப்பதால், முயற்சிகளில் தாமதங்கள் வரலாம். வீண் விரயங்கள் ஏற்படலாம். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் இருக்கும்.
பரிகாரம்: மகான்களின் பிருந்தாவனத்தைத் தரிசிக்கவும். மகத்தான நன்மை கிடைக்கும்.