(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: வீரிய உத்யோகஸ்தானத்தில் தன குடும்பாதிபதி சுக்கிரன் இருக்கிறார். அவருடைய பார்வை பாக்கியஸ்தானத்தில் படுகிறது. தனாதிபதி பாக்கிய ஸ்தானத்தைத் தொடர்பு கொள்வதால் தன பாக்கியங்கள் அதாவது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதே இடத்தை குருவும் சேர்ந்து பார்ப்பதால் நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். 11ல் சனி, ராகு இணைந்திருப்பது தொழில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் இருக்கும். திருமணமான பெண்கள் கருத்தரிப்பதற்கு சாதகமான கிரக நிலைகள் உண்டு. ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்க அமைப்புள்ளது. சிலருக்குப் பணி நிரந்தரமாகும்.
கவனம் தேவை: குரு மூன்றில் இருப்பது சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. செலவுகள் அதிகரிக்கும். ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. சுபகாரியங்களைச் செய்யும் பொழுது சிறிய தடைகள் ஏற்படலாம். அதிக அலைச்சலும் உழைப்பும் உண்டு.
சந்திராஷ்டமம்: 2.8.2025 இரவு 11.52 முதல் 5.8.2025 காலை 11.23 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று விநாயகரை வணங்கிவிட்டு காரியத்தை தொடங்கவும். வெற்றி கிடைக்கும்.