(4.9.2025 முதல் 10.9.2025 வரை)
சாதகங்கள்: ஆறுக்கு அதிபதி 12-ல் அமர்ந்திருப்பது ஒருவகையில் சிறந்ததுதான். எதிரிகள் விலகுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் அடங்கியிருக்கும். ஆனால் அதே நேரம் பாக்யாதிபதி 12ல் இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ராசியில் லாபாதிபதி சுக்கிரன் அமர்ந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பது சிறந்தது. சுபகாரியங்களில் உள்ள தாமதம் விலகும். மூன்றாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து உங்கள் வெற்றியையும் வேலைவாய்ப்பையும் முன்னேற்றத்தையும் தைரியத்தையும் சகோதர உறவுகளையும் பலப்படுத் துவார். இது ஒரு சிறப்பான பலன். புதிய சிந்தனைகளைத் தரும்.
கவனம் தேவை: தன குடும்ப பாக்கிய ஸ்தானத்தில் நெருப்பு கிரகமான சூரியன் அமர்ந்திருப்பது சிறப்பான நிலை அல்ல. அதோடு கேதுவும் அமர்ந்திருப்பதும், சனி - ராகு பார்வை வாக்கு ஸ்தானத்தில் விழுவதும், பேசுவதில் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனத்தை வலியுறுத்துகிறது. வாக்குறுதிகளை தந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அஷ்டம கிரகங்களான சனி ராகு துன்பங்களைத் தருவதற்கு காத்திருப்பதால் எதிலும் பொறுமையும் கவனமும் தேவை.
சந்திராஷ்டமம்: 6.9.2025 காலை 11.22முதல் 8.9.2025 பிற்பகல் 2.29 வரை சந்திராஷ்டமம் உண்டு.
பரிகாரம்: வயதானவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். துர்க்கையை வணங்குங்கள்.