(7.8.2025 முதல் 13.8.2025 வரை)
சாதகங்கள்: செவ்வாய் 5, 10க்குரியவர். தைரியஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருப்பது சிறப்பு. அவருடைய பார்வை பாக்கிய ஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திலும் வருகிறது. இதனால் செவ்வாய் காரகத்தொழில்கள் சிறப்பாக நடைபெறும். நிலம் வீடு விற்பனையில் ஆதாயம் உண்டு. சகோதர உறவுகள் கை கொடுக்கும். 12ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது நல்ல ஓய்வையும் உறக்கத்தையும் குறிக்கிறது. குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் படுவதால் கஷ்டங்கள் குறையும். அங்கே சனி வக்கிரகதியில் இயங்குவதால் ஓரளவு கஷ்ட நிவர்த்தி உண்டு.
கவனம் தேவை: இரண்டாம் இடத்தில் கேது லக்னத்தில் சூரியன் விரய ஸ்தானத்தில் குரு. உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ளவும். கண்களையும் பாதங்களையும் பராமரிக்கவும். கொலஸ்ட்ரால், ரத்த அழுத்த பிரச்னைகள் வரலாம். மருத்துவச் செலவுகள் உண்டு. சுப விரயங்கள் உண்டு. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 10.8.2025 காலை 2.12 முதல் 12.8.2025 காலை 6.10 வரை சந்திராஷ்டமம் உண்டு.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயிலுக்குத் தவறாமல் செல்லுங்கள். அம்பாளின் அருள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.