இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கடகம்

Published: 5 hours ago

(28.8.2025 முதல் 3.9.2025 வரை)

சாதகங்கள்: ராசியில் சுக்கிரன் வந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய ஏழாம் இடப் பார்வை இல்லறத்தில் இனிமையைத் தரும். குருவின் பார்வை அஷ்டம கிரகங்களின் கஷ்டப் பலனை சற்று குறையச் செய்யும். சுக ஸ்தானத்தில் குருவின் பார்வை இருப்பதால், துன்பங்கள் இருந்தாலும் அவ்வப்பொழுது மகிழ்ச்சி கிடைக்கும். மூன்றில் செவ்வாய் எதையும் தாங்கும் இதயத்தைத் தரும். போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெற்றுத் தரும். 5,10க்கு உரியவராக செவ்வாய் இருப்பதால், தொழிலிலும் வேலைவாய்ப்பிலும் போட்டியைச் சமாளித்து முன்னேறும் ஆற்றலைத் தரும். வெளிநாடு சென்று வேலை தேடும் வாய்ப்பினைப் பெற்றுத் தரும். கடன்களில் ஒரு பகுதி அடைபடும் வாய்ப்புண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்கள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். தசை புத்தி அனுமதித்தால் அதிகாரப் பதவிகள் தானே வந்தடையும்.

கவனம்தேவை: இரண்டில் சூரியன், கேது, புதன், இணைந்து இருக்கின்றார்கள். வாக்கு ஸ்தானத்தில் நெருப்புக் கோளான சூரியன் அமர்ந்திருப்பதாலும் அவர் பூரண பலத்தோடு இருப்பதாலும், தைரியம் என்று நினைத்துக் கொண்டு வேகமாகப் பேசி விவகாரத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. சில நேரத்தில் சரியாகப் பேசுகிறோம் என்று நினைத்து தவறாகப் பேசி விடுவோம். புதன் அந்தக் குழப்பத்தைத் தருவார்.

பரிகாரம்: வாயில்லா ஜீவனுக்கு உணவு தாருங்கள்.

பிறந்தநாள் பலன்கள்