(25.9.2025 முதல் 1.10.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு ஆறில் குரு மறைந்திருந்தாலும், 12 க்குரியவர் ஆறில் மறைவதால் மறைமுக லாபம் உண்டு. அதுமட்டுமல்ல. சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்கள் தன ராசியைப் பார்வையிடுவதும், குருவும் தன ராசியைப் பார்வையிடுவதும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புகள். பத்தில் செவ்வாய் அமர்ந்து உங்கள் சுக ராசியைப் பார்வையிடுகிறார். வீடு மனை விற்பனை தொழில்களிலும், வீடுமனை வாங்க வேண்டும் என்ற முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் மனோ தைரியம் அதிகரிக்கும் குழந்தைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் உண்டு மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பெற்றோர்களால் ஆதரவு உண்டு. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் அமைப்பும் உண்டு.
கவனம் தேவை: தொழிலில் கவனம் இல்லாவிட்டால் கடன்கள் அதிகரிக்கும் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளால் சில நேரம் துன்பங்கள் ஏற்படலாம் வேலைப் பளு அதிகரிக்கும். அஷ்டமச் சுக்கிரன் என்பதால் பெண்கள் விஷ யத்தில் கவனம் தேவை. வீணான அபவாதங்கள் ஏற்படலாம். நகை மாற்றும் பொழுது நஷ்டங்கள் ஏற்படலாம். ஆடை ஆபரணத் தொழில் செய்பவர்கள் கவனமாகச் செய்ய வேண்டும். கலைஞர்கள் நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க வேண்டும்.
பரிகாரம்: அஷ்டமி அன்று பைரவரை வணங்குங்கள். பகை நீங்கும். மனதில் சாந்தம் பிறக்கும்.