(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: சுக லாபாதிபதி செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. வீடு, நிலம் முதலியவற்றை வாங்கி பதிவு செய்வதில் இருந்த தடைகள் அகலும். ஏழாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். பஞ்சமாதிபதி ராசியைப் பார்ப்பது சிறப்புத்தான். ஆடை ஆபரணத் தொழில்கள் வளமாக இருக்கும். உணவுப் பொருள் தொழிலும் லாபம் தரும். ஆறில் குரு அமர்ந்து உங்கள் தன குடும்ப ராசியைப் பார்வையிடுவதால், இரண்டாம் இடத்தில் இருக்கும் சனி ராகுவின் தீய பலன்கள் மட்டுப்படும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய முன்னேற்றமும், புகழும், புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணவரவும் கிடைக்கும். எட்டில் புதன் மறைந்தாலும் பத்திரிகைத் தொழில், தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுயதொழில் முயற்சிகள் பலிக்கும்.
கவனம்தேவை: பாக்கியஸ்தானத்தில் சனி ராகு இருப்பதைக் கவனத்தில் கொண்டு பேச வேண்டும். ஏதோ எங்கோ கேட்ட விஷயத்தை நீங்களே கண் காது மூக்கு வைத்து பெரிதாக்கிப் பரப்பக் கூடாது. தவறான செய்திகளை நிஜம் என்று நம்பி வெளியே சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டாம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.
பரிகாரம்: மாலை பூஜையில் ஒரு நல்லெண்ணெய் அகல் விளக்கு ஏற்றவும்.