search-icon-img
featured-img

மிதுனம்

Published :

(30.10.2025 முதல் 5.11.2025 வரை)

சாதகங்கள்: ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சுக்கிரன், ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்வதும், அங்கே புதன் மற்றும் சூரியனோடு இணைவதும், நல்ல அமைப்பு. பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். வணிகத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அநேகமாக சாதகமான பலன் கிடைக்கும் காலம் இது. அதிசாரமாக குரு தன குடும்பஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதால், இந்தக் காலம் நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். குரு எட்டாம் இடத்தையும் பார்ப்பதால், கஷ்டங்கள் குறையும். ஏழுக்குரிய குரு இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்று இருப்பதால், தம்பதிகள் அந்நோன்யமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் இணைந்து செயல்படுவர்.

கவனம் தேவை: பாக்கியஸ்தானத்தில் சனி வக்கிரம் பெற்று ராகுவோடு இணைந்து இருப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சில நேரங்களில் யோசிக்காமல் செய்த காரியங்கள் கவலையைத் தரும். குடும்ப உறுப்பினர்களால் கசப்பு ஏற்படலாம். சில நேரங்களில் நாம் போட்ட திட்டங்கள் வேறு விதமாக மாறும்.

சந்திராஷ்டமம்: 28.10.2025 இரவு 10.14 முதல் 31.10.2025 காலை 6.48 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வாருங்கள்.