(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்பஸ்தானத்தில் குருபகவான் உச்சத்தில் அமர்ந்து உங்கள் ஆறாவது மட்டும் அஷ்டம ராசியை பார்வையிடுவதால் கடன்கள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். இதுவரை பட்ட அலைச்சலுக்கு பலன் கிடைக்கும். சுப காரியப் பேச்சுக்கள் வெற்றிகரமாக நீங்கள் விரும்பியபடி சாதகமாகும். மனதில் தெய்வச் சிந்தனை அதிகரிக்கும்.செவ்வாய் சுப பலத்தோடு இருப்பதால் சொந்த வீடு வேண்டும் என்று முயற்சி செய்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு, இட மாற்றம் என எதிர்பார்ப்பவர்களுக்கு இப்பொழுது வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
கவனம் தேவை: சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. குழந்தைகள் வாகனத்தில் செல்லும்போது கவனத்துடன் செல்லும்படி கூறவும். உடலில் உஷ்ண நோய்கள், சிறிய கட்டிகள் மற்றும் ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். எதிலும் திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமும் பொறுமையும் அவசியம்.
சந்திராஷ்டமம்: 25.11.2025 காலை 4.28 முதல் 27.11.2025 பகல் 2.07 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் லட்சுமி நாராயணனை வழிபடுங்கள்.


