(11.9.2025 முதல் 17.9.2025 வரை)
சாதகங்கள்: பாக்கியாதிபதி புதன் உச்சமடைந்து இருக்கிறார். சில விரயங்கள் இருந்தாலும்கூட நன்மைகள் உண்டு சுபகாரியங்கள் நடக்கும். லாபஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதால், அரசாங்க அனுகூலங்கள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுக்கிரன் 11ல் இருப்பதால்,விருந்தினர்கள் வருகையால் இல்லம் மகிழ்ச்சி பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியத்திற்கான சாதகமான கிரக நிலைகள் உள்ளன. சிலருக்கு விரும்பிய இடத்தில் உத்தியோகம் மாற்றம் கிடைக்கும்.
கவனம் தேவை: சிலருக்கு மனதில் இனம் புரியாத கவலை இருக்கும். ராகு ஐந்தில் இருப்பதால், ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படலாம். குறிப்பாக பெண்களுக்கு வயிறு, கர்ப்பப்பை பிரச்னைகள் வரலாம். பிள்ளைகள் விசயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டாம். புதிய முயற்சிகளிலும் இப்போது இறங்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 12.9.2025 பிற்பகல் 5.30 முதல் 14.9.2025 இரவு 8.03 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: அருகாமையில் உள்ள கோயிலுக்கு ஏதேனும் ஒரு நாள் சென்று அரை மணி நேரம் சேவை செய்வதன் மூலம் இறைவனின் ஆசி கிடைக்கும்.