(25.9.2025 முதல் 1.10.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் குரு சதுர்த்த கேந்திரத்தில் பலம் பெற்றிருக்கிறார். ஆறில் உள்ள கேது தவிர மற்ற கிரகங்கள் சற்று ஏறுக்கு மாறாகத்தான் இருக்கின்றன. புதன் ஆட்சி பெற்று ராசியைப் பார்வை இடுவது சிறப்பு. நண்பர்களால் உதவி உண்டு. தெய்வ பலம் அதிகரிக்கும். சற்று விழிப்புணர்வோடு செய்தால் தொழில் நஷ்டங்களைக் குறைக்க முடியும். புதன் சூரியன் இணைவால் சில பலன்கள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு தசா புக்திகள் சாதகமாக இருந்தால் பலன் கிடைக்கும்.
கவனம் தேவை: உடல் வலி அசதி சோர்வு அதிகரிக்கும். செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். அஷ்டமச் செவ்வாய் புதனோடு இணைந்திருப்பதால் செய்திகளைப் புரிந்து கொள்வதில் பிரச்னைகள் ஏற்படலாம். காலிமனை போன்ற விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். மனைகள் பத்திரப்பதிவு விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பாராத அபவாதங்கள் நேரலாம். தாய்மாமன் உறவுகள் பாதிக்கப்படலாம்.
சந்திராஷ்டமம்: 24.09.2025 காலை 2.56 முதல் 26.09.2025 பிற்பகல் 3.24 வரைசந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் விரைவில் நன்மைகள் கிடைக்கும்.