(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு ஐந்தில் சுக்கிரனும் ராசிக்கு நான்கில் ராசிநாதன் குருவும் இருக்கின்றார்கள். தன குடும்பாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கின்றார். குரு கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால், அவரால் நற்பலன்களை இப்போதைக்கு செய்ய முடியாது என்றாலும், ராசியை கைவிட மாட்டார். அதோடு அவருடைய பார்வை அஷ்டம ஸ்தானத்திலும் கர்ம ஸ்தானத்திலும் விரய ஸ்தானத்தில் விழுவதால், சிற்சில நன்மைகள் கிடைக்கும். ஆறில் சூரியன் ஆட்சி பெற்று இருப்பது அரசாங்க உதவிகளைப் பெற்றுத் தரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்யும். சுக்கிரன் ஐந்தில் அமர்ந்து லாபஸ்தானத்தைப் பார்ப்பதால், ஆடை ஆபரணத் தொழில், உணவுத் தொழில், வாகனத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
கவனம்தேவை: புதிய முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் தப்பான பேச்சு வார்த்தைகள் கருத்து வேற்றுமையைத் தரும். அமைதியைக் குலைக்கும். காரணம், செவ்வாய் ஏழில் இருந்து ராசியைப் பார்க்கிறார்.
சந்திராஷ்டமம்: 27.8.2025 இரவு 7.21 முதல் 30.8.2025 காலை 7.53 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அவரை வணங்குங்கள்.