(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்பாதிபதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து உங்கள் ராசியைப் பார்வையிடுகிறது. கேந்திரத்தில் குரு அமர்ந்து பார்வை பலம் தருவதால் சற்று சிரமம் குறைந்தாலும், முழு அளவில் நீங்காது. பலம் என்று பார்த்தால் ஆறாம் இடத்தில் உள்ள கேதுவைச் சொல்லலாம். மற்றபடி பல கிரகங்களும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வருமானம் ஓரளவு இருக்கும் ஆனால் சேமிப்புக்கு வழி இருக்காது. சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். கவனம் சிதறாமல் அன்றாடப் பணிகளைச் செய்வதன் மூலம் சிரமத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
கவனம் தேவை: விரயஸ்தானம் பலம் பெற்றிருப்பதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் கூடுதலாக இருக்கும். வேளா வேளைக்கு மருந்து சாப்பிடுவதும் தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது. பிரச்னைகள் தலைமாட்டில் இருப்பதால் நீங்களே அதில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். என்ன இருக்கிறதோ அதை மட்டும் இப்போதைக்கு செய்து கொண்டிருங்கள். காலம் மாறும். அதுவரை பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 31.7.2025 காலை 11.16 முதல் 2.8.2025 இரவு 11.52 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் தீபத்திற்கு எண்ணெய் கொடுக்கவும். இஷ்ட தெய்வ பிரார்த்தனையை விடாமல் செய்யவும்.