(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் உச்ச பலத்தோடு இருக்கிறார் அவர் அஷ்டமத்தில் இருக்கிறார் என்று கவலைப்பட வேண்டியது இல்லை. மறைமுகமான நற்பலன்களை அவர் தருவதோடு உங்கள் தன, குடும்ப ராசியையும் சுக ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடைசியில் உங்களுக்கு சாதகமாகவே ஆக்கித் தருவார். அதோடு உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் பாவ கிரகங்களான ராகுவும் சனியும் உங்களுக்கு மிகச்சிறந்த ஆற்றலையும் முயற்சியையும் தந்து வெற்றிபெறச் செய்வார்கள்.
கவனம் தேவை: வேலை பார்க்கும் இடத்திலும் வீட்டிலும் சுமுகமான உறவைப் பேண வேண்டும். பெரும்பாலும் கற்பனையான எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்கும். வேலைச் சுமையும் மேலதி காரிகளின் அழுத்தமும் சில சமயங்களில் நிதானம் இழக்க வைக்கும். சுப காரியமுயற்சிகள் தடைகள் ஏற்பட்டு பலனளிக்கும். முயற்சியை விட்டு விட வேண்டாம். தேவையற்ற செலவு வந்து முன்னே நின்று முக்கியமான விஷயத்திற்காக வைத்திருந்த பணத்தை இழக்க வைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனைவழிபடுங்கள்.


