(25.9.2025 முதல் 1.10.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் ராசியைப் பார்வை இடுவது என்பது சிறப்பான அமைப்பு. மூன்றில் சனி ராகு அமைந்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்று வார்கள். அவருக்கு குரு பார்வையும் கிடைப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த திட்டங்கள் வேகம் பெறும். தடைகள் அகலும். சுபகாரிய முயற்சிகள் பலிக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. தனலாபம் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து வில்லங்கங்கள் அகலும். பத்தில் சூரியன் புதன் இணைந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் உண்டு. தகவல் தொழில்நுட்பத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் அதிகம். புதிய திட்டங்களால் ஆதாயம் உண்டு. புனிதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். திருமணமாகி குழந்தைச் செல்வத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம்.
கவனம் தேவை: தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் உண்டு. திடீர் வரவுகள் போலவே திடீர் செலவுகளும் உண்டு. யாருடைய பிரச்னையிலும் தலையிட வேண்டாம் யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் சிலருக்கு இட மாற்றங்கள் உண்டு. வீடு மனை சொத்து பத்திரப்பதிவு முதலியவிஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
பரிகாரம்: சனிக்கிழமை விரதம் இருந்து ராமரை வழிபடுங்கள்.