(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: ஆறுக்குரிய சுக்கிரன் எட்டில் இருப்பது நற்பலன்களையே செய்யும். மறைமுகமான நன்மைகள் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் உள்ள சனி ராகு உங்களின் முயற்சிகளை ஊக்கப்படுத்தி வெற்றிகரமான வழிகளை காண்பிக்கும். நீங்கள் நினைத்த எண்ணங்கள் படிப்படியாக நடைமுறைக்கு வருவதைக் காண்பீர்கள். முயற்சிகளை சற்றும் தளர விட வேண்டாம். குருவும் மூன்றாம் இடத்தை பார்வையிட்டு சாதகமாக இருக்கிறார். அவருடைய பார்வை ராசிக்கும் விழுவதால் ராசி பலன் தருகிறது. கமிஷன் தரகு முதலிய தொழில்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். வீடு விற்பனைத் தொழில்களைச் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் நன்மை உண்டு. மனைவி வழியில் அல்லது கணவன் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
கவனம்தேவை: குரு கேந்திரத்தில் இருப்பதால், குடும்ப பிரச்னைகளில் தேவையில்லாத தலையீடுகள் இருக்கக்கூடாது. கருத்து வேறுபாடுகளில் சச்சரவுகளில் பிறர் விஷயங்களில் நீங்களாகப் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது. எட்டில் சுக்கிரன் இருப்பதால், சில நன்மைகள் உண்டு என்றாலும் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: அனுமனை வணங்கவும்.