search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

(7.8.2025 முதல் 13.8.2025 வரை)

சாதகங்கள்: ராசிக்கு உரிய சுக்கிரனும் குருவும் இரண்டாம் இடத்தில் அமர்ந்து கர்ம ஸ்தானத்தைப் பார்வையிடுவது சிறப்பான பலன்களைத் தரும். இரண்டு தனக்காரர்களும் அதாவது சுக்கிரனும் குருவும் இணைந்து தனஸ்தானத்தில் இருப்பது பொருளாதாரப் பற்றாக்குறையை நீக்கும். கடன்களை அடைத்து விடும் வலிமையைத் தரும். மூன்றில் சூரியன் அமர்ந்திருப்பதால் அரசாங்க காரியங்கள், ஒப்பந்தங்கள் முதலியவை சாதகமாகவே இருக்கும்.

கவனம் தேவை: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கின்றார். நான்காம் இடத்தில் கேது இருப்பதால் வாகனத்தில் அவ்வப்போது பிரச்னைகள் வரும். பிரயாணங்களில் தடைகள் ஏற்படும். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. கூட்டாளிகளால் பிரச்னைகள் உண்டு.

சந்திராஷ்டமம்: 5.8.2025 காலை 11.23 முதல் 7.8.2025 இரவு 8.11 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பூஜை அறையில் ஒரு நல்லெண்ணெய் அகல் விளக்கு வைத்து வழிபடுங்கள்.