(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை சப்தம ஸ்தானத்தில் இருந்த சூரியன் வார மத்தியில் எட்டாம் இடத்திற்குச் சென்று செவ்வாயோடு இணைகிறார். விரயாதிபதி அஷ்டமத்தில் இருப்பது நன்மைதான் என்றாலும்கூட, சூரியன் இணைவதால் சில பாதிப்புகள் இருக்கவே செய்யும். ஆயினும் ராசிநாதன் ஏழில் அமர்ந்து புதனோடு கூடி ராசியைப் பார்ப்பதால், சிரமங்கள் அதிக அளவில் தொல்லை கொடுக்காது. பஞ்சமாதிபதி ராசியாதிபதி இணைப்பு கேந்திரத்தில் ஏற்படுவதால் நன்மைதான் கிடைக்கும். சனியின் வக்ர நிவர்த்தியால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பதவி உயர்வும். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. புதன் நல்ல விதத்தில் அமர்ந்திருப்பதால் பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன் வழியில் ஆதரவு உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை, பத்திரிக்கை துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம்தேவை: அஷ்டமத்தில் செவ்வாய் சூரியன் இணைந்திருப்பதால், உஷ்ண நோய்களால் பாதிப்பு உண்டு. அல்சர் முதலிய பிரச்னைகள் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் மனைவி இவர்களோடு பேசும் பொழுது அவர்கள் சொல்லும் சில கடுமையான சொற்களை பொருட்படுத்த வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அஷ்டமச் செவ்வாய் ஆரோக்கிய தொல்லையையும் மருத்துவச் செலவையும் கொடுப்பதால், சேமிப்பு கரையும். செலவுகளில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கையை விளக்கு போட்டு வணங்குங்கள்.