(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: ராசியாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் பலம் பெற்றிருக் கிறார். குடும்பஸ்தானமும் அது என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிலவும். தனகாரக குருவும் அதே ஸ்தானத்தில் இருப்பது சாலச் சிறந்தது. பத்தாம் இடத்தில் சனி ராகு இருக்கிறார்கள். தொழிலில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது. கவனக்குறைவான செயல்கள் நஷ்டத்தைத் தந்துவிடும். சுபச் செலவுகள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் பலிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெறும்.
கவனம் தேவை: சுகஸ்தானத்தில் கேது இருப்பதால், வீண் அலைச்சல்களும் கற்பனையான குழப்பங்களும் மனதில் இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. கூட்டாளிகளால் பிரச்னைகள் உண்டு. பெற்றோர் வழியில் பிரச்னைகள் உண்டு. பூர்வீகச் சொத்தில் மனக்கஷ்டங்கள் ஏற்படலாம். பிறர் விஷயத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 5.8.2025 காலை 11.23 முதல் 7.8.2025 இரவு 8.11 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பூஜை அறையில் ஒரு நல்லெண்ணெய் அகல் விளக்கு வைத்து வழிபடுங்கள்.