(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: ராசியில் நீச கதியில் இருந்த சுக்கிரன், தன குடும்பஸ்தானத்தில் வாரத் தொடக்கத்தில் நகர்வது அற்புதமான அமைப்பு. தன குடும்பாதிபதி அதே ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதும், அங்கே ராசியோடு சேர்ந்து இருப்பதும் சிறப்பு. இவர்களோடு குரு 11ம் இடத்தில் உச்சம். ஆறாம் இடத்தில் ராகு மற்றும் சனி சாதகமாக இருப்பதால் வருமானம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சி முன்னேற்றமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பரஸ்பர அன்பு இருக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புண்டு. வேலை இல்லாதவர்க்கு புதிய வேலை கிடைக்கும்.
கவனம் தேவை: 12க்கு உரிய சூரியன் இரண்டாம் இடத்தில் அமர்ந்ததால், ஒரு காரியத்திற்காக வைத்திருந்த பணம் வேறு ஒரு காரியத்திற்காக தேவையில்லாமல் செலவழிக்கக்கூடிய வாய்ப்புண்டு. 12ல் கேது இருப்பதால், மருத்துவச் செலவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பகை வேண்டாம். எதிலும் பேராசைப்படாமல் இருந்தால் நினைத்தது நிறைவேறும். தகவல் தொடர்புகளில் கவனமும் சரியான வார்த்தையாடலும் தேவை.
சந்திராஷ்டமம்: 4.11.2025 பகல் 12.35 முதல் 6.11.2025 காலை 11.47 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள்.