(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: ராசியில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். மூன்றுக்குரிய செவ்வாய் தைரிய ஸ்தான அதிபதியாகி ராசியில் அமர்ந்து இருப்பதால், எதையும் துணிவோடு எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும். ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து இருக்கிறார் இருவருக்குமே அந்த இடம் சிறப்பு என்பதால் நினைப்பது நிறைவேறும். நினைப்பதும் நன்றாகவே இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கும், அரசாங்க ஊதியம் பெறுபவர்களுக்கும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவை கிடைக்க வாய்ப்புண்டு. ஆறில் சனி ராகு இணைந்து உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள்.
கவனம் தேவை: ராசியில் செவ்வாய் இருப்பதைக் கவனத்தில் கொள்ளவும். தேவையில்லாத அதிகப்படியான விஷயங்களையும் எதிர்மறை கருத்துக்களையும் கூற வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. 12ல் கேது இருப்பதால், தூங்கும் போது ஏதாவது ஒரு பிரச்னை வந்து தூக்கத்தைக் கெடுக்கும். கெட்ட கனவுகள் வரலாம். 10ல் குரு சுக்கிரனோடு இணைந்திருப்பதால் புது முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.
பரிகாரம்: வாரந்தோறும் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பிரச்னைகள் தீரும்.