17-8-25 முதல் 16-9-25 வரை
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதி செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால் உங்கள் தனித்திறமை வெளிப்படும். எதையும் சாதிக்கும் ஆற்றல் பிறக்கும். இருப்பினும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. 2ல் கேது இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். உடன்பிறப்புகளால் மனகசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்து விஷயங்கள் ஆதாயமாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. 8ல் ராகு இருப்பதால் வாழ்வில் சின்ன சின்ன தடைகள் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். இருப்பினும் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தந்தை உடல் நலனில் கவனம் தேவை.தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.தொழில், உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பதவி உயர்வு ஊதிய உயர்வு வந்துசேரும்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 6,7,8.
பரிகாரம்: ஓசூரில் உள்ள சந்திர சூடேஸ்வரரை திங்கள் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.