17-11-25 முதல் 15-12-25 வரை
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 5ல் செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுக்ரன் 4ல் பலம் பெறுவதால் தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் இருந்தாலும் சிறு இழப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். 8ல் ராகு இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதம் ஏற்படும். சனி 9ல் இருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.குரு மற்றும் மூத்தோரின் வழிபாடு நன்மை தரும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 27, 28, 29.
பரிகாரம்: வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரரை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


