17-9-25 முதல் 17-10-25 வரை
இரக்க குணம் அதிகம் நிறைந்த மகர ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு யோகாதிபதி ஆகிய புதன் பகவான் 9ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டு. 2ல் ராகு இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். 3ல் சனி இருப்பதால் விடா முயற்சி வெற்றி தரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தாய் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உருவாகும். புதிய வீடு வாகனம் சீர்படுத்த செலவினங்கள் உண்டு. குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் ஆதாயம் உண்டு. எதிரிகளால் பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையால் அனுகூலம் உண்டு. சில நேரங்களில் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. மூத்தோர் மற்றும் குருவின் ஆசி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரும்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 20, 21, 22.
பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை சனிக்கிழமையில சென்று வழிபடுவது நன்மை தரும்.