18-10-25 முதல் 16-11-25 வரை
தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக சுக்கிர பகவான் மற்றும் புதன் பகவான் பலம் பெறுவதால் எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிலும் அஜாக்கிரதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதிலும் வெற்றி பெறும் ஆற்றல் உருவாகும். எந்த சூழ்நிலையையும் நாசுக்காக கையாளுவீர்கள். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்,மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்க படலாம். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 13, 14, 15.
பரிகாரம்: நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை சனிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.