17-11-25 முதல் 15-12-25 வரை
நுட்பமான அறிவுத்திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசியிலே சஞ்சரிப்பதால், மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஆளுமைத் திறன் வெளிப்படும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மனோபலம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். 4ல் ராகு இருப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் வந்து நீங்கும். குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.குரு 9ல் இருப்பதால் தந்தை மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நீண்டநாளாக வரவேண்டிய பதவி உயர்வு வந்துசேரும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக யாத்திரை சென்று வருவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 6, 7, 8.
பரிகாரம்: மருதமலை முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.