17-8-25 முதல் 16-9-25 வரை
இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவரும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 2 ல் சஞ்சரிப்பதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தங்க நகை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். தாயால் அனுகூலம் உண்டு. 4ல் கேது இருப்பதால் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தந்தை உடல்நலம் மேம்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். நீண்டநாளாக வரவேண்டிய பதவி உயர்வு ஊதிய உயர்வு வந்துசேரும்.நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 2, 3, 4.
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.