17-7-25 முதல் 16-8-25 வரை
மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவதில் விருப்பம் உடைய ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் ராசியிலே சஞ்சரிப்பதால் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தாய் வழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். சொத்து வாங்குவது விற்பது இது போன்ற விஷயங்கள் சாதகமாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. கேது 4ல் இருப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். குலதெய்வ அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். செவ்வாய் 4ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மைகளை ஏற்படுத்தும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. பிதுர் வழி சொத்தால் நன்மை உண்டு. வெளிநாட்டு தொடர்பால் நன்மை உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் பணிகளில் சிரத்தையுடன் செயல்படுங்கள். எதிலும் காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 6,7, 8.
பரிகாரம்: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தீஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபட வாழ்வு வளம் பெறும்.