(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எப்பொழுதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம குருவாக சஞ்சரித்து, தேவையற்ற மன குழப்பம், டென்ஷன், கடந்த கால எதிர்மறையான நிகழ்வுகளால் மன வருத்தம், அதனால் தேவையற்ற வீண் கோபம், கடந்த கால நிகழ்வுகளின் மூலம் சில படிப்பினைகளை தந்த குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 2 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். குருபகவான் தனது 5 ம் பார்வையால் 6 ஐ பார்ப்பதால் கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். புதிய வேலைவாய்ப்புக்கான முயற்சிகள் கைகூடும்.குருபகவான் தனது 7 ம் பார்வையால் 8 ஐ பார்ப்பதால் எதிர்பாராத தன வரவு உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 10ஐ பார்ப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு ஊதிய உயர்வு வந்து சேரும். செல்வாக்கு கூடும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். ஆசிரியர்கள், பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவர். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.