28.4.24 முதல் 4.5.24 வரை
நல்ல பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும், ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்னைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். கலைத்துறையினருக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது
நல்லது.
பரிகாரம்: பைரவரை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.