21.07.24 முதல் 27.07.2024வரை
துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள்.சந்திரனின் சஞ்சாரம் மன குழப்பத்தை உண்டாக்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. ராசிநாதன் சஞ்சாரத்தால் காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை வரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் சாத்தியமாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பர். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கலைத்துறையினருக்கு சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
பரிகாரம்: வாராகியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.