18.4.2024 முதல் 24.4.2024 வரை
இந்த வாரம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும், கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்று. கடன் தொல்லை அகலும்.