19.6.2025 முதல் 25.6.2025 வரை
இந்த வாரம் மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். அரசியல்துறையினருக்கு வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில்வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும்.