மகரம்

உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு சில நல்ல மாற்றங்களை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். இதுவரை இருந்த டென்ஷன், கோபம் குறையும். மன அழுத்தம் நீங்கும். வாழ்வில்  குழப்ப நிலை நீங்கி தெளிவு உண்டாகும். 21-4- 2023 வரை மனதில்  வீண் பயத்தை தவிர்த்து, தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.  எதிர்காலம் பற்றிய வீணான சந்தேகங்கள் வந்து நீங்கும் மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். உடன்பிறப்புகளால்மனக்கசப்புகள் வர வாய்ப்புள்ளதால் அனுசரித்து செல்வது நல்லது.21-4- 2023 க்கு பிறகு தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.17-1-2023 வரை ஜென்ம சனியின் தாக்கம் இருப்பதால். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் தடுமாற கூடிய சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். சோம்பலைத் தவிர்த்து எப்போதும் உற்சாகமாக செயல்படுங்கள்.17-1-2023 க்கு பிறகு ஜென்மச் சனி விலகுவதால் இதுவரை இருந்த மன அழுத்தம் குழப்பம் கவலை குறையும். எதிர்மறை சிந்தனைகள் நீக்கி நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். பேச்சில் அதிக கவனம் தேவை. சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.30-10-2023 வரை எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மன அமைதி குறையும். யோகா மற்றும் தியானம் பயில்வதால் நன்மை உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை.30-10-2023 க்கு பிறகு மனதில் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசால் அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு.பெண்கள் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.   பரிகாரம்: திருவள்ளூர் வீரராகவ பெருமாளை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us