எதிலும் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் உடைய மேஷ ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நிச்சயம் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டு. பொருளாதார நிலையில் உயர்வு உண்டு. 21-4- 2023 வரை தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவ செலவினங்கள், தொழில் மற்றும் உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.21-4- 2023 க்கு பிறகு கடந்த காலத்தில் நடந்த எதிர்மறை நிகழ்வுகளை பற்றி சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் அதிலிருந்து நல்ல படிப்பினைகளை எடுத்துக் கொள்வது அவசியம். எதிர்காலம் பற்றிய பயம் கவலைகளை தவிர்ப்பது நல்லது. வீண் கோபத்தை தவிர்ப்பது அவசியம். எதிலும் நிதானம், பொறுமை, விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். 17-1-2023 வரை தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை. 17-1-2023 க்கு பிறகு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உங்களுடைய நீண்ட நாள் உழைப்பிற்கான அங்கீகாரமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.30-10-2023 வரை தேவையற்ற மனக் குழப்பமும், அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகள் வந்து நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் விழிப்புணர்வு அவசியம். 30-10-2023 க்கு பிறகு எதிலும் வெற்றி உண்டாகும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்னையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அரசியல்துறையினருக்கு தடைபட்டு வந்த உயர் பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.பரிகாரம்: பட்டீஸ்வரம் ஸ்ரீஅன்னை துர்க்கையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த நன்மை தரும்….
477