எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்த மிதுன ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு அஷ்டமச் சனி விலகுவதால், 5 வருடத்திற்குப் பிறகு வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். 21-4-2023 வரை தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளைச் செய்ய நீங்கள் நிர்பந்திக்கப்படலாம். சிலருக்கு தொழில் மற்றும் உத்யோகத்தில் இட மாற்றங்கள் ஏற்படலாம். 21-4-2023 க்கு பிறகு உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள், லட்சியங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் உத்யோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டு. பணப்புழக்கம் பலமடங்கு அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.17-1- 2023 வரை அஷ்டமச் சனி இருப்பதால் எதிலும் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தொடர்பு இல்லாத பிரச்னைகளில் மற்றவர்களுக்காக தலையிடுவதை தவிர்க்கவும். 17-1- 2023 க்கு பிறகு அஷ்டம சனி விலகுவதால் கடந்த 5 வருடமாக இருந்த பிரச்னைகள், தடைகள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் மற்றும் உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி உயர்வு ஏற்படும். புதிய தொழில் மற்றும் உத்யோகத்திற்கான முயற்சிகள் கைகூடும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை. பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும்.30-10-2023 வரை எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. 30-10-2023 க்கு பிறகு தாய் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உண்டு.பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். அரசியல்துறையினர் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். பரிகாரம்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனிபகவானை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….
510