பொறுமையே பெருமை சேர்க்கும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு சில தடைகள் பிரச்னைகள் இருந்தாலும், நல்ல மாற்றமும் முன்னேற்றமும், பொருளாதார நிலை உயர்வு நிச்சயம் உண்டு. 21-4-2023 வரை உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் செல்வாக்கு அந்தஸ்து அனைத்தும் உயரும். 21-4-2023 க்கு பிறகு வீண் விரயங்கள் மற்றும் மருத்துவ செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் நிதானம் தேவை.17-1-2023 வரை தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் அனைத்தும் கைகூடும். பிதுர் வழிபாடு மற்றும் குரு வழிபாடு நன்மை தரும். 17-1-2023 க்கு பிறகு தந்தை உடல் ஆரோக்கியம் பெறும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சில நேரங்களில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உங்கள் பணிகளில் கடமை உணர்வுடன் செயல்படுவது நல்லது. நிதானம் தேவை.30-10-2023 வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பொருளாதார நிலை உயரும். தேவையற்ற வீண் விரயங்கள் இருக்கும். 30-10-2023க்கு பிறகு எண்ணிய எண்ணங்கள், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்து விஷயங்களை கவனமாக கையாள்வது நல்லது.பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….
443