எதிலும் நடுநிலையாக செயல்படும் துலா ராசி அன்பர்களே, இந்த வருடத்தின் முற்பகுதியில் சின்னச்சின்ன தடைகள் பிரச்னைகள் இருந்தாலும், பிற்பகுதி உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 21-4- 2023 வரை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் வீண் பிரச்னைகள் வந்து நீங்கும். கடன் பிரச்னைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வங்கிக் கடனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனக்கசப்புகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் நிதானம் தேவை.21-4- 2023 க்கு பிறகு கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூக அந்தஸ்து உயரும்.17-1-2023 வரை தாய் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் விழிப்புடன் செயல்படுவது அவசியம். 17-1-2023 க்கு பிறகு தாய் உடல்நலம் சீராகும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுங்கள். மன குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் புத்தி ஸ்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் முடிவெடுக்க தடுமாற கூடிய சூழல் உருவாகலாம்.30-10-2023 வரை தேவையற்ற வீண் குழப்பங்கள், எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும். தூக்கமின்மையால் அவதிப்படும் கூடிய சூழல் உருவாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்னைகள் உருவாகும். 30-10-2023 க்கு பிறகு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். எதிலும் தெளிவு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. முக்கிய பிரமுகர்கள் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அரசால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பரிகாரம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரை வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்….
567