அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை
குடும்பம்: கோள் சாரத்தில், ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் இருந்தாலும், கும்ப ராசி அவரது ஆட்சி வீடாக இருப்பதால், சிரமங்கள் குறைந்தே இருக்கும். மேலும், சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக அலைச்சலும், முயற்சியும் மேலிடும். வருமானம் இப்புத்தாண்டு முழுவதும் போதிய அளவிற்கு இருக்கும். எந்த மாதத்திலும் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! ஆடி 1-ம் (17-7-2024) தேதி முதல், ஆடி 19-ம் (4-8-2024) தேதிக்குள், எதிர்பாராத பெரிய செலவு ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை, கிரக நிலைகள் உணர்த்துகின்றன. அதே காலகட்டத்தில், வீட்டிலுள்ள உயர்ந்த பொருள் ஒன்று காணாமற் போவதற்கும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நாம் எப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை மிகச் சரியாகவும், தக்க தருணத்திலும் எடுத்துரைத்து வழிகாட்டுவதில் ஜோதிடக் கலைக்கு ஈடிணை ஏதுமில்லை!! விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் சிறு குழப்பம் ஒன்று ஏற்பட்டு, வரன் நிச்சயமாகும். கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஆகும். காரணம், குருவும், சுக்கிரனும், ரிஷப ராசியில் இணைந்திருப்பதேயாகும்.
உத்தியோகம்: வேலைச் சுமையும்பொறுப்புகளும் அதிகரிக்கும். அலுவலகப் பொறுப்புகள் சம்பந்தமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வரும் அவசியம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகம் காரணமாக, பலர் குடும்பத்தை விட்டுப் தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருத்தல் நல்லது. குறிப்பாக, இரவு நேரங்களில், கண் விழித்து, கழிப்பறைக்குச் செல்லும்போது, நிதானம் அவசியம். ஏனெனில், கிரக நிலைகளின்படி, கீழே விழுந்து அடிபடும் தோஷம் உள்ளதை, ஜென்மச் சனி மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய புத்தாண்டு இது! குறிப்பாக, தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களில் சிலருக்கு விபத்துகள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக சஞ்சார நிலைகள் குறிப்பிடுகின்றன. வரும் ஒரு வருடக் காலத்திற்கு, தொழில் விஸ்தரிப்பிற்காக, அதிகளவில், முதலீடு செய்ய வேண்டாம். பல தருணங்களில், வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களினால், பிரச்னைகள் ஏற்படும். வட மாநிலத் தொழிலாளர்களால், எதிர்பாராத சோதனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதை சனி மற்றும் ராகுவின் நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
கலைத்துறையினர்: இத் தமிழ்ப் புத்தாண்டில், அளவோடு நன்மைகளைப் பெறுவீர்கள்! வருமானம் போதிய அளவிற்கு இருக்கும் என்பதை குரு மற்றும் சுக்கிரனின் நிலைகள் குறிப்பிடுகின்றன. ஆதலால், பணத் தட்டுப்பாடு இருப்பதற்கு சாத்்தியக்கூறில்லை!! புதிய வாய்ப்புகள், மகிழ்ச்சியை அளிக்கும். மக்களிடையே பிரபலமாவீர்கள்! நடிகர் – நடிகைகளுக்கு, புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
அரசியல்துறையினர்: ஜென்மச் சனியினால், அதிக அலைச்சலும், உழைப்பும் அசதியை ஏற்படுத்தும். கட்சியில், தேவையற்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். கட்சியின் மீது உங்களுக்குள்ள விஸ்வாசத்தை மேலிடம் சந்தேகிப்பார்கள். மேலும், கட்சியில் நிகழ்ந்துவரும் உட் பூசல்களினால், உங்களுக்கு எதிராக ஓர் அணி உருவாகியுள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, புத்தாண்டில் முதல் மூன்று மாதங்கள் வெளிேய செல்லும்போதும், பிற மாணவர்களுடன் தர்க்கம் செய்யும்போதும், எச்சரிக்கையாக இருங்கள். வாக்கு ஸ்தானத்தில், ராகு இருப்பதால், உணர்ச்சிவசப்பட்டு, தவறான சொற்களால் பிறர் மனத்தில் ஆத்திரத்தையும், முன்கோபத்தையும் உருவாக்கிவிட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் சந்தேகத்திற்கிடமின்றி உணர்த்துகின்றன. தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருப்பினும், அதற்கேற்ற விளைச்சலைத் தந்தருள்வார்கள், சனி பகவானும், செவ்வாயும்! ஏற்கெனவேயே கூறியுள்ளபடி, இந்தத் தமிழ்ப் புத்தாண்டின் மேகாதிபதியாக சனி பகவான் திகழ்கிறார். கொடுப்பதில், தன்னிகரற்றவர் சனி பகவான்! ஆதலால் இந்த ஆண்டு, தண்ணீர்ப் பற்றாக்குறை சிறிதளவும் இராது. அதற்கு மாறாக, தேவைக்குச் சற்று அதிகமாகவே மழை பொழிவதால், விளைச்சலில் ஓர் சிறு பங்கு பாதிக்கப்படக்கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்கும்.
பெண்மணிகள்: அதிக உடல் உைழப்பையும், கற்பனையான கவலைகளையும், இரவு நேரங்களில் கண்விழிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, சனி பகவானின் ஜென்ம ராசி சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. உடல் உபாதைகளுக்காக, மருத்துவச் சிகிச்சை பெற்றுவரும் பெண்மணிகள், மருத்துவர்கள் ெசால்படி, அந்தந்த நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிவுரை: உணர்ச்சிவசப்படுவது, எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள், பயங்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும் (ஆதாரம்: “ஸிம்ஹவலோகனம்” எனும் மருத்துவ ஜோதிட நூல். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதென்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மனத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்நூல் விவரித்துள்ளது. எந்த அளவிற்கு, மனதை கற்பனையான கவலைகள் இல்லாமல் பாதுகாத்துக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியமும் நன்கு நீடிக்கும்)
பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ வியாழன்தோறும், மாலை – பிரதோஷ நேரத்தில் மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும்.