கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை
குடும்பம்: இவ்வருடம் முழுவதும், ராகு உங்களுக்கு அனுகூலமாக நீடிக்கிறார். ெஜன்ம குருவினால், நன்மை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை! கேது, சுக்கிரன், புதன் ஆகியோரும் சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றனர்!! இந்தத் தமிழ்ப் புத்தாண்டாகிய குரோதி வருடம் முழுவதும், ஜீவனாதிபதியாகிய சனி பகவான், அவருடைய ஆட்சி வீட்டில் நிலைகொண்டிருக்கிறார். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இருப்பினும், வருமானத்திற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக அதிக அலைச்சல் இருக்கும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால், தீர்த்த தல யாத்திரை ஒன்று சித்திக்கும் யோகமும் உள்ளது. விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்களும், குழப்பங்களும் மேலிடும். அவற்றின் காரணமாக, வரன் அமைவதும் தாமதப்படும். பழைய கடன்களினால், கவலை உண்டாகும். உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள், ஆரோக்கியத்தைப் பாதிக்கும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக, அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் சனி பகவானும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருப்பது, வேலையில் சிறந்த யோக பலன்கள் கிடைக்கவிருப்பது, மேலதிகாரிகளும், சக-ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இதுவரை எவ்விதக் காரணமுமில்லாமல், நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, பதவியுயர்வு ஆகியவை இனி கிடைப்பதற்கு ஆதரவாக உள்ளனர், சம்பந்தப்பட்ட கிரகங்களின் சஞ்சார நிலைகள்! வெளி நாடு சென்று, பணியாற்ற விருப்பமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். இருப்பினும், ராகுவின் நிலையினால், இடைத்தரகர்களை நம்பாமலிருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், விரும்பத்தகாத சூழ்நிலையிலும், நிறுவனத்திலும் உங்களைச் சேர்த்துவிடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது – கிரக நிலைகளின்படி!
தொழில், வியாபாரம்: அனைத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கும் சனி பகவான்தான் அதிபதி! உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும் அவரே! கோள்சார விதிகளின் படி, சுப பலத்துடன் அவர் சஞ்சரிப்பதால், நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெற்றுத் தருவார். ஆயினும், அலைச்சலும், ஓய்வில்லாத உழைப்பையும், பிற மாநிலங்களுக்குப் பயணமும் தவிர்க்க இயலாதவை!! சில தருணங்களில், நிதி நிறுவனங்களினால், சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். சில்லரை வியாபாரிகள், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
கலைத்துறையினர்: புத்தாண்டில், முதல் ஏழு மாதங்கள் – அதாவது, ஐப்பசி முடியும் வரை கிரக நிலைகள் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். குறிப்பாக, திரைப்படத் துறையினருக்கு, லாபகரமான காலகட்டமாகும். புதிய படங்கள் மகத்தான வெற்றியடையும். மக்களிடையே புகழ் ஓங்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன் மட்டுமல்ல! அரசியல் துறைக்குத் தொடர்பு கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், அரசியலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கட்சியில், ஆதரவு பெருகும். வரவிருக்கும் தேர்தலில் பொறுப்புள்ள பதவியொன்று வகிக்க நேரிடும்.
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், இந்தப் புத்தாண்டில் ஓரளவே சாதகமாக வலம் வருகிறார்! பல தருணங்களில், வீரியம் நிறைந்த கிரகங்களுடன் இணையவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது, இப்புத்தாண்டில்! அத்தகைய தருணங்களில், புதன் தனது பலத்தை இழப்பதாக ஜோதிடக் கலை விவரித்துள்ளது. ஆதலால், மாணவ மணிகளுக்கு கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும், இப்புத்தாண்டில்! ஆயினும், பின்னடைவு சிறிதும் இராது!! விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும், எளிதில் வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையினர்: இப் புத்தாண்டில், மேகங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார், சனி பகவான்! அவர், இந்தாண்டு முழுவதும், தனது ஆட்சிப் பீடமாகிய கும்ப ராசியில் வீற்றிருக்கிறார். ஆதலால், விவசாயத் துறையினருக்கு, இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை சிறிதும் இராது. சில தருணங்களில் தேவைக்கு அதிகமாகவே மழை பொழியக்கூடும். இதர வசதிகளும், குறைவில்லாது கிடைக்கும். அரசாங்கச் சலுகைகள் தக்க தருணத்தில் கிட்டும். சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.
பெண்மணிகள்: சுக்கிரன், பூரண சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். ஆயினும், குரு பகவான் ஜென்ம ராசியில்தான் சஞ்சரிக்கிறார். குடும்பச் சூழ்நிலையில், சிறு சிறு பிரச்னைகளும், ஒற்றுமையின்மையும் கவலையை அளிக்கும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அனுகூலமான ஆண்டு இது! திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு, வரன் அமைவதில் சிறு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் நிச்சயமாகும். வேலையில்லாத பெண்களுக்கு, சிறு முயற்சியிலேயே நல்ல வேலை கிடைக்கும்.
அறிவுரை: அனைவரிடமும் சற்று அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுதல், முன் கோபம் ஆகியவை கண்டிப்பாகக் கூடாது.
பரிகாரம்: ஜென்ம ராசி குருவுக்கு மட்டும் பரிகாரம் செய்தால் போதும். வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். இத்தீபத்தில் சக்தியைப் பற்றி மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள் அற்புதமாக விவரித்துள்ளன. அனைத்து தேவதைகளும்,” சந்தியாக் காலம்” எனவும், “பிரதோஷ காலம்” எனவும் போற்றப்படும் மாலை நேரத்தில், பக்தர்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்தருள்வார்கள் என அந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.