மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை
குடும்பம்: கோள்சார விதிகளின்படி, சூரியன், குரு மற்றும் புதன் ஆகியோர் மட்டும்தான் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இப்புத்தாண்டின் ஆரம்பத்தில்! சுக்கிரன், சனி உள்ளிட்ட மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை!! வரவும், செலவும் சமமாகவே இருக்கும். ஆடி மாதம் 11-ம் தேதியிலிருந்து, ஐப்பசி 12-ம் தேதி வரை பண நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திட்டமிட்டு செலவு செய்து வந்தால், கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. ெநருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படும். சில தருணங்களில், தவறான வரனை நிச்சயித்துவிடும் தவறு ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. எச்சரிக்கை அவசியம். குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் கவலை ஏற்படும். வெளியூர்ப் பயணங்களின்போது, விலையுயர்ந்த பொருட்களையும், உத்தியோகம் சம்பந்தமான ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிக அலைச்சலால், ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில் கவனமாக இருத்தல், வரும் ஓராண்டுக் காலத்திற்கு மிகவும் அவசியமாகும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது, முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக மட்டுமே ஜோதிடக் கலை உள்ளது என சிலர் நினைப்பது சரியல்ல! குறிப்பிட்ட கிரக நிலைகள் சேரும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எத்தகைய அம்சங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பனவற்றை, நமக்கு அறிவூட்டி, நம்மைப் பாதுகாக்கிறது “ேஜாதிடக் கலை”. சக ஊழியர்களுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். மேலதிகாரிகளுடன் பழகும்போதும், பேசும்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது எத்தகைய அவசியம் என்பதை ஜோதிடக் கலை விவரிக்கிறது.
தொழில், வியாபாரம்: போட்டிகள் அதிகரித்தாலும், உங்கள் திறமையினால், அவற்றை முறியடித்து, உங்கள் விற்பனையைப் பாதுகாத்துக் கொள்வீர்கள் என கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வியாபாரத்தை அதிகரிப்பதற்காக ஏற்கும் வெளியூர்ப்பயணங்கள் லாபகரமாக இருக்கும். பிற தொழிலதிபர்களுடன் கூட்டுத் தொழில் கையெழுத்தாகும். விற்பனை நிலையங்களை அதிகரிப்பதற்கு மிகவும் அனுகூலமான புத்தாண்டு இது! ஏற்றுமதித் துறையினருக்கு, நிதி நிறுவனங்களின் பொருளுதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.இறக்குமதித் துறையினருக்கும், புதிய வாய்ப்புகள் உருவாகி அதன் காரணமாக லாபம் உயரும். சந்தை நிலவரம் சாதகமாக மாறும்.
அரசியல்துறையினர்: அரசியல் துறைக்கு, சம்பந்தப்பட்ட கிரகங்கள், சுப பலம் பெற்று வலம் வருவதால், இவ்வருடத்தில், உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கவுள்ளது. மேல்மட்டத் தலைவர்கள், உங்கள் மீது அளவற்ற நம்பிக்கையும், மதிப்பும் கொண்டுள்ளதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. சிலருக்கு, கட்சிமாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. அந்த மாற்றம், நன்மையைத் தரும். சூரியன் அனுகூலமாக இருப்பதால், செல்வாக்குள்ள பிரமுகர் ஒருவரின் தொடர்பும், அதன் காரணமாக, உங்கள் அரசியல் வாழ்க்கையில் ஓர் மிகச் சிறந்த திருப்பமும் உண்டாகும்.
மாணவ – மாணவியர்: கிரக நிலைகளின்படி, மிதுன ராசி மாணவ, மாணவியருக்கு, மாசி மாதம் 27-ந் தேதி வரை கல்வியில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாசி 28-ந் தேதியிலிருந்து, படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அப்போது, சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமும் ஏற்படும். நேர்முகத் தேர்வுகள் இருப்பின், மிகத் தெளிவாக, பதிலளிக்கும் திறன் ஓங்கும். கூடிய வரையில், வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
விவசாயத் துறையினர்: வயல் பணிகள் சற்று கடுமையாகவே இருக்கும். கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், பணம் விரயமாகும். பழைய கடன்கள், கவலையை அளிக்கும். அண்டை நிலத்தாரோடு பகையுணர்வு மேலிடும். நவீன விவசாயக் கருவிகள் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.
பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, சற்று சிரமமான ஆண்டாகும். குறைந்த வருமானத்திற்குள், குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஸப்தம ஸ்தானத்திற்கு, சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளதால், கணவர் – மனைவியரிடையே ஒற்றுமை குறையும். அதனால், மன நிம்மதி பாதிக்கப்படும். உடல் நலனிலும், சற்று கவனமாக இருத்தல் நல்லது. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிிலை நிம்மதியைத் தந்தாலும், பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் பெண்களுக்கும், இது பொருந்தும். திருமணத்திற்குக் காத்துள்ள நங்கையருக்கு, வரன் அமைவதில் சிறு சிறு பிரச்னைகளால், தாமதமாகும்!
அறிவுரை: எந்தக் காரியமானாலும், சற்று சிந்தித்து செய்யுங்கள். பிறருடன் பேசும்போதும், பழகும்போதும், நிதானமாக இருத்தல் அவசியம்.
பரிகாரம்: ஒரு முறை சூரியனார்க் கோயிலுக்குச் சென்று, ஒன்பது நவக்கிரகங்களுக்கும், நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். சக்தியுள்ள பரிகாரம் இது!
சூரியனார்க் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு, உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மூன்று வெள்ளிக்கிழமைகள், மாலை நேரத்தில் மூன்று அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வந்தாலே போதும்.