சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை
குடும்பம்: கிரக சஞ்சார நிலைகளின்படி, இந்த ஆண்டு முழுவதும் வரவை விட செலவினங்களே அதிகமாக இருக்கும்! ஆவணி 8-ம் (24-8-2024) தேதியிலிருந்து, கார்த்திகை மாதம் முடியும் வரை, நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிவரும். சில தருணங்களில், புதிய கடன்களை வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தவிர்க்க முயற்சியுங்கள். ஏனெனில், கடனைவிட, ஓர் கொடிய விஷம் கிடையாது. குடும்பத்திலும், பல பிரச்னைகள் கவலையை அளிக்கும். ஆரோக்கியத்திலும், சற்று கவனமாக இருத்தல் அவசியமாகும். ராகுவின் நிலையினால், எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உடல் பாதிப்பும் அளவோடு நிற்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஒருசிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண முயற்சிகளில், சிறிது குழப்பம் ஏற்பட்டு, அதன்பின்பு, வரன் நிச்சயமாகும். சொத்து பாகப்பிரிவினை சம்பந்தமாக நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்.
உத்தியோகம்: உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக செயல்படவேண்டிய ஆண்டு இது! மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். ஆடி மாதம் சிறிய ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதால், விடுப்பில் செல்ல நேரிடும். ஆயினும், உத்தியோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் இளைஞர்களுக்கு, மனத்திற்குத் திருப்தியளிக்காத, வேலை கிடைக்கும். ஒப்புக்கொள்வது எதிர்காலத்திற்கு, அஸ்திவாரமாக இது அமையும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் துலாம் ராசி அன்பர்கள், தமது பணிகளிலும், பொறுப்புகளிலும் அதி கவனமாக இருத்தல் அவசியமாகிறது. அவசர முடிவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கிரக நிலைகளின்படி, தற்போது பார்த்துவரும் உத்தியோகத்தில் விரக்தி ஏற்படக்கூடும். உங்கள் மனமே, உங்களுக்கு எதிரியாகக்கூடும் எனக் கூறுகின்றன, மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள், தற்போதைய கிரக நிலைகளைப் பற்றி!!
தொழில், வியாபாரம்: கண்ணும் கருத்துமாக, இருக்கவேண்டிய புத்தாண்டு இது! லாபத்தைத் தக்கவைத்துக் கொள்ள சற்று பாடுபடவேண்டியிருக்கும். கூடிய வரையில், விஸ்தரிப்புத் திட்டங்களை, புரட்டாசி மாதம் முடியும் வரையில் ஒத்திப்போடுவது விவேகமாகும். பண விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆண்டாகும்.கடனுக்கு சரக்குகள் அனுப்புவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது ஏற்றுமதித் துறையினருக்கு முற்றிலும் பொருந்தும்!! வரவேண்டிய பாக்கிகளை எளிதில் வசூல் செய்ய இயலாது. சந்தை நிலவரமும் ஓரளவே உதவிகரமாக இருக்கும். தொழிற்சாலைகளுக்கு, சட்டப்படி அமைக்கப்படவேண்டிய பாதுகாப்பு விதிகளைக் கண்டிப்பாகச் செயல்படுத்தவும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதைக் கிரகங்கள் குறிப்பிட்டுக்காட்டி எச்சரிக்கை செய்கின்றன.
கலைத்துறையினர்: வருமானம் ஒரே சீராகவும், அளவோடும் இருக்கும், இப்புத்தாண்டு முழுவதும்! பொது மக்களின் ஆதரவு, உற்சாகத்தை அளிக்கும். வீட்டுப் பணியாளர்களினால், பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டிய ஆண்டு, இந்தக் குரோதிப் புத்தாண்டு!! திரைப்படத் துறையினர், புதிய முதலீடுகளில் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமிது. நஷ்டம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன.
அரசியல்துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், அனுகூலமாக சஞ்சரிக்கவில்லை! அடிக்கடி மனதில் குழப்பமும், சஞ்சலமும் மேலிடும். தற்போதுள்ள கட்சியைவிட்டு, வேறு கட்சிக்கு மாறிவிட, ஆர்வம் மேலிடும். தை மாதம் 7-ம் (20-1-2025) தேதியிலிருந்து கிரக நிைலகளின் ஆதிக்கம் அனுகூலமாக மாற ஆரம்பிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருங்கள்.
மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும், கல்விக்கு அதிகாரம் பெற்ற அனைத்து கிரகங்களும் ஓரளவு அனுகூலமாக இருப்பதால், கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நீடிக்கும். ஆடி மாதம் மட்டும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உயர்கல்விக்கு, பிறர் உதவி கிடைக்கச் செய்வார், உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ள ராகு! நன்மை செய்வதிலும், ராகுவிற்கு ஈடிைண யாருமில்லை. பலருக்கு, படிப்பு முடிந்தவுடன், வேலை அளித்தருள்வார், ராகு!
விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் ராகு ஆகிய இருவரும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன, இ்ப்புத்தாண்டில்! தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறைவுமிராது. கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் அவ்வப்போது தொல்லை தரும்.
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே உங்களுக்கு அனுகூலமாக இல்லை, இப்புத்தாண்டு முழுவதும்! ஆயினும், ராகு, உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளார். அடிக்கடி எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். வேலை பார்க்கும் பெண் மணிகளுக்கு, பணிச் சுமை அதிகரித்தாலும், அதற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, சிறு தயக்கமும், குழப்பமும் ஏற்பட்டு அதன் பின்பு வரன் அமையும்.
அறிவுரை: உடல் நலனில் கவனமாக இருங்கள். தேவையற்ற அலைச்சல்களையும் உடல் உழைப்பையும் குறைத்துக் கொள்ளுங்கள்.நிரந்தர உடல் உபாதைகளுக்கு, சிகிச்சைப் பெற்று வரும் துலாம் ராசியினர், மருந்துகளைக் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு அவசியம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து வந்தால் அனைத்து தோஷங்களும் கதிரவனைக் கண்ட பனி போல் மறையும்.