மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்
ஆளுமை திறனும் அதிகார தோரணையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். விடாமுயற்சியும் எதிர்மறை சிந்தனையும் ஏற்றத்தை தரும். சனிபகவான் 7ல் கண்டகச் சனியாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்வது நல்லது. சோம்பலை தவிர்க்கவும். குரு பகவான் 10 ல் இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சில நேரங்களில் விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் வந்து சேரும். உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். இருப்பினும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.ராகு கேது பகவான் முறையே 8,2 ல் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் திடீர் அதிர்ஷ்டம் உண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகளால் இழப்புகளும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள்.கலைத்துறையினர் உங்களுக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை கூட வீணாக்காமல் பயன்படுத்தி கொள்வது அவசியம்.
பரிகாரம்: சிங்கிரி கோயில், பூவரசன் குப்பம், பரிக்கல்லில் உள்ள நரசிம்மரை ஒரே நாளில் தரிசனம் செய்வது நன்மை தரும்.