சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி,விசாகம் 1, 2, 3 ம் பாதம்
எந்த சூழ்நிலையிலும் தன்னிலை மாறாத துலா ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். நல்ல அனுகூலமான பலன்கள் ஏற்படும். இருப்பினும் சில விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.சனிபகவான் 5 ல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. மன குழப்பம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் முடிவெடுக்க இயலாமல் அவதிப்படுவீர்கள். பூர்வீக சொத்தால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். ஷேர் மார்க்கெட்டில் சிறு இழப்புகள் வந்து நீங்கும்.குரு பகவான் 8 ல் அஷ்டமகுருவாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் தடைகள் தாமதங்கள் வந்து நீங்கும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். ராகு கேது பகவான் முறையே 6,12 ல் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி உண்டாகும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். தேவையற்ற வீண் விரயங்கள் வந்து நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணிகளில் அதிக சிரத்தையுடன்செயல்படுங்கள். மாணவர்கள் தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள்.கலைத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெறலாம்.
பரிகாரம்: ஆம்பூர் அருகே பள்ளிகொண்டாவில் உள்ள பள்ளி கொண்ட பெருமாளை வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.